Skip to main content

சந்திரபாபு நாயுடு ஸ்டாலினை பாராட்ட இதுதான் காரணம்! வானதி சீனிவாசன் பேட்டி!

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
chandrababu naidu meets mk stalin



பாஜகவுக்கு எதிராக பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பு பாஜகவுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திமுகவினர் கூறியுள்ளனர்.
 

இந்த சந்திப்பு குறித்து பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசனிடம் கேள்விகளை முன் வைத்தோம். 
 

மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்களில் உள்ள தலைவர்களையும், முதல் அமைச்சர்களையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து வருகிறார். அந்த அடிப்படையில் திமுகவின் ஆதரவு வேண்டும் என்று என்னை கேட்டார். நான் மனப்பூர்வமாக ஆதரவு தருவதாக உறுதி தந்திருக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?
 

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தான் செய்கிறேன் என்று சந்திரபாபு நாயுடு அனைவரையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார். இதில் தமிழ்நாட்டில் ஸ்டாலின் அவர்கள், ஜனநாயகத்தினுடைய விரோதத்தன்மையின் காரணமாக பாஜக அரசை அகற்றுவோம் என்கிறார். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலை எப்படி ஜனநாயகத்தோடு நடத்தினார்கள். உயர்நீதிமன்றமே எப்படி தலையிட நேர்ந்தது என்று அவர் நினைத்து பார்த்தார் என்றால் இப்படி பேச மாட்டார். 
 

அந்த நீதிமன்றமாக இருந்தாலும், சி.பி.ஐ.யாக இருந்தாலும், ரிசர்வ் வங்கியாக இருந்தாலும் அந்த அமைப்புகளை கூட மிரட்டுகின்ற, அச்சுறுத்துகின்ற நிலையில்தான் மோடி தலைமையில இருக்கும் பாஜக ஆட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் கூறுகிறாரே?
 

இன்று நிர்வாகத்தில் இருக்கக்கூடிய அமைப்புகளில் நடைமுறையில் சில நேரத்தில் அதிகாரிகளுக்குள் சிக்கல்கள் எழுவது சகஜனமான ஒரு விஷயம். ஆனால் எந்த நேரத்திலும் அமைப்பினுடைய செயல்பாட்டிற்கு களங்கம் விளைவிக்காமல் அதில் சுமூகத்தன்மையோடு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக அரசாங்கம் அதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஸ்டாலின் அவர்கள் சொல்கின்ற எந்த ஒரு குற்றச்சாட்டுக்களுமே பாஜக அரசு வேண்டுமென்றே அமைப்புகளின் செயல்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கிறது என்று சொல்ல முடியாது. 

 

Vanathi Srinivasan


 

பாஜகவிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற ஒரே எண்ணத்தோடு பயணம் செய்ய முடிவெடுத்துதான் அணி திரண்டு வருகிறோம். என்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. நான் பிரதமர் வேட்பாளர் அல்ல. எங்கள் அணியில் பலம் வாய்ந்த தலைவர்கள் பலர் உள்ளனர். மோடியைவிட ஸ்டாலின் சிறந்த நிர்வாகிதான் என்று சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறாரே?
 

இன்று சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு ஏதோ ஒரு பற்றுதல் தேவைப்படுகிறது. ஏதாவது ஒன்றை பற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. ஏதாவது ஒன்றை சொல்லி தலைவர்களை சந்திக்க காரணம் வேண்டும். எப்படி புகழ்ந்தால் தலைவர்கள் அவரோடு நிற்பார்களோ அதற்காக புகழ்ந்து கொண்டிருக்கிறார். இதே சந்திரபாபு நாயுடுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடியை எப்படியெல்லாம் புகழ்ந்தார் என்று அனைவருக்கும் தெரியும். இன்று அரசியல் காரணங்களுக்காக வெளியே வந்துவிட்டு, தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்கு வருகின்ற புகழ் வார்த்தைகள் அது. 
 

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னெடுத்து வரும் பா.ஜனதா எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள் பா.ஜனதாவை பதட்டம் அடைய வைத்துள்ளது என்று கனிமொழி கூறியுள்ளாரே?
 

பாஜகவுக்கு எந்த பதட்டமும் இல்லை. இந்த மாதிரி கூட்டணியை நிறைய நாங்கள் பார்த்தவர்கள். சந்திரபாபு நாயுடு ஆரம்ப காலத்தில் இருந்து கூட்டணியிலும் இருந்திருக்கிறோம். கூட்டணி இல்லாத காலத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கூட்டணியில் இருந்து மத்திய அரசிடம் இருந்து அத்தனை உதவிகளையும் வாங்கிக்கொண்டு அமராவதியில் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்காதவர், இன்று இங்கு வந்து மிகப்பெரிய கூட்டணி வைப்பதாக சொல்வது விந்தையாக இருக்கிறது. அவருடைய மாநிலத்திலேயே அவரால் தாக்கு பிடிக்க முடியாது. அவர் ஏதோ ஒரு பெரிய கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஒருபோதும் மோடிக்கு எதிராக இவர்களால் ஒரு தலைவரை அடையாளம் காண முடியாது. இவ்வாறு கூறினார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார்.