Skip to main content

வாக்கு எண்ணிக்கைக்கு, முன்னரே 50000 ஓட்டுக்களை ஒதுக்குங்கள்... -சரத்குமார்

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

சேலத்தில் நேற்று மகளிரணி விழாவை கொண்டாடியது சமத்துவ மக்கள் கட்சி. அப்போது அவர் அளித்த பேட்டியில், இவ்வாறு கூறினார்.
 

sarathkumar


ஓட்டு வங்கி அரசியலை நோக்கி, பாஜக செல்வதால், அதிமுகவுடன் சந்தர்ப்பவாத கூட்டயமைத்துள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்விகளைச் சந்திக்கும் தைரியம் வேண்டும். தமிழ்நாட்டின் பெரியக் கட்சிகளே தேர்தலைச் சந்திக்கப் பயப்படுகின்றன. அதிமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு, அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ள, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு, லோக்சபா தேர்தலில், மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். தனித்து போட்டியிடும் தினகரனின் முடிவு வரவேற்கத்தக்கது. ஏற்கனவே, இரு இயக்கங்களுக்கும் கடுமையாக உழைத்து விட்டேன். இனி, கட்சிக்காக, தமிழக மக்களுக்காக, தனித்துப் போட்டியிடுகிறேன். 
 

மற்ற கட்சியினர் ஒரு தொகுதிக்கு, 30 முதல் 40 கோடி ரூபாய் ஒதுக்கி செலவு செய்வதால், போட்டி சமமாக இருக்காது, ஆகவே போட்டியை சமன்செய்ய பணம் இல்லாத வேட்பாளர்களுக்கு, தேர்தல் கமிஷன், முன்னதாகவே, 50 ஆயிரம் ஓட்டுகளை ஒதுக்க வேண்டும். மக்கள் பிரச்சனை, சமுதாய மாற்றம் குறித்து, எங்களின் பிரச்சார வியூகம் அமையும். கட்சியினரிடம் விருப்பமனு பெற்றுவருவதால், என் மனைவி ராதிகா போட்டியிடுவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.