Skip to main content

அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்திய பாமக... கோபமான எடப்பாடி... அதிமுகவை முந்திய பாமக!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

வன்னிய சமூக மக்களின் கவனத்தைக் கவரும் வகையில், ராமசாமி படையாச்சியார் மணி மண்டபத்தை 25ந் தேதி முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் கோலாகலமா திறந்து வைத்தார்கள். ஆனால் அதிகாரப்பூர்வமாக திறக்கிறதுக்கு முன்பே, பா.ம.க.வினர் அந்த மணி மண்டபத்தைத் திறந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, வன்னிய சமூக மக்களின் பெரும் ஆதரவு பெற்ற கட்சி பா.ம.க. என்று டாக்டர் ராமதாஸ் தொடங்கி கட்சி நிர்வாகிகள் அனைவரும் தெரிவிக்கும் நிலையில், அந்த சமூகத்தைச் சேர்ந்த ராமசாமி படையாச்சியாருக்கு எடப்பாடி அரசு மணிமண்டபத்தைக் கட்டி, அபிமானத்தைப் பெற முயல்வதாக பா.ம.க.வினரிடம் ஒரு புகைச்சல் இருந்தது வருகிறது. 
 

admk



இந்த நிலையில் அரசு சார்பில் மணிமண்டபத்தைத் திறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்பாக, 23-ந் தேதியே பா.ம.க.வின் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான ஒரு டீம், கடலூர் மஞ்சக்குப்பத்தில் கட்டப்பட்டிருக்கும் மணிமண்டபத்துக்கு சென்று, அதன் கதவுகளை திறந்தது வைத்துள்ளனர் என்று கூறுகின்றனர். பின்னர் உள்ளே எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, மண்டபத்தின் உள்ளே நிறுவப்பட்டிருக்கும் படையாச்சியார் சிலைக்கு முன்பாக கும்பலாக நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டு அந்த டீம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன்பின் அந்தப் படத்தை அவங்க சமூக வலைத்தளங்களில் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். இது அ.தி.மு.க. தரப்பில் சர்ச்சைகளையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதலில் எரிச்சலான முதல்வர் எடப்பாடி, அவங்க அரசியல் நமக்குப் புரியலையே என்று கூறிவிட்டு, சரி விடுங்க பாத்துக்கலாம் என்று நெருங்கிய வட்டாரத்தில் கூறியுள்ளார். மேலும் நாம் நம்ம பாணியில் திறந்துவைப்போம் என்று  25-ந் தேதி ஓ.பி.எஸ் உடன் சென்று , மணிமண்டபத்தைத் திறந்து வைத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.