Skip to main content

தம்பிதுரையை நெருக்கும் வருமானவரிதுறை! -பாஜகவை குறை கூறும் ஆதரவாளர்கள்

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

கரூர் எம்.பி. தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் தம்பிதுரை. இந்த முறையும் கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். லோக்சபா துணை சபாநாயகராக இருந்த அவர், இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று பணத்தை தண்ணீராக கட்சிகாரர்களுக்கு கொடுக்க திட்டம் தீட்டியிருக்கிறார் என்றும் 100 சி வரைக்கும் செலவு செய்ய முடிவு பண்ணியிருக்கிறார் என்றும் கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமான கட்சியினர்.

 

thambidurai

 

இந்த நிலையில் கரூர் எம்.பி. தொகுதிக்குட்பட்ட மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் சேதுவின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரூபாய் 50 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் கரூரில் என்எஸ்என் கல்லூரி அதிபர் செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
 

இந்த சோதனையில் ரூபாய் 6 கோடி வரை பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. வருமானவரித் துறையினரின் இந்த திடீர் சோதனை தம்பிதுரை தரப்பினருக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

அதுவும் தம்பிதுரைக்கு நெருக்கமானவர் மீது குறிவைத்து ரைடு நடத்தப்படுவது, ''நாம் ஜெயிக்க கூடாது என்று பிஜேபி தலைமை ஏதுவும் நினைக்கிறேதோ'' என்கிற சந்தேகம் வலுக்கிறதாம் தம்பிதுரை தரப்பில். பிஜேபி - அதிமுக கூட்டணி ஏற்படும் முந்தினநாள் வரை பிஜேபியை சகட்டு மேனிக்கு வறுத்தெடுத்தவர் அதிமுகவில் தம்பிதுரை மட்டுமே. அதனால் அவர் ஜெயிக்கக் கூடாது என்று பிஜேபி தலைமை விரும்புவதால்தான் தம்பிதுரையின் நெருக்கமானர்கள் மீது தொடர்ச்சியாக ரைடு நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் தம்பிதுரைக்கு நெருக்கமானவர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.