Skip to main content

வாக்காளர்களுக்கு விநியோகித்த மோடி படத்துடன் கூடிய தங்க நாணயம்; போலீஸில் சிக்கியதால் பரபரப்பு

Published on 04/04/2021 | Edited on 04/04/2021

 

Gold coin with Modi image distributed to voters

 

வாக்களர்களுக்கு கொடுத்துவந்த மோடி படத்துடன்கூடிய தங்க நாணயங்களும், லட்சக் கணக்கான பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்திருப்பது புதுவை மாநில தேர்தல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறது. 

 

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளராக ஜி.என்.எஸ். ராஜசேகரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் போட்டியிடுகிறார். என்.ஆர்.காங்கிரஸ்  கூட்டணியில் சீட்டு கிடைக்காத விரக்தியில் முன்னாள் அமைச்சரான சிவா சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்கிடையில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட தருபாரனியம் என்பவர் கடைசி நேரத்தில் பாஜகவில் ஐக்கியமானார்.

 

Gold coin with Modi image distributed to voters

 

மும்முனை போட்டியாக இருந்த திருநள்ளாறு தொகுதியில், மக்கள் செல்வாக்கு மிகுந்த அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனுக்கு செக் வைக்கும் விதமா பாஜக வேட்பாளரான ஜி.என்.எஸ். ராஜசேகரன் மோடி படம் போட்ட கவரில் தங்க காயின், இரண்டாயிரம் பணம் என முப்பதாயிரம் வாக்காளர்களுக்கு குறிவைத்து கொடுத்துவந்துள்ளார். இது தேர்தல் பறக்கும்படைக்கு தெரியவந்து வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த 96 ஆயிரம் பணத்தையும்,  149 தங்க காயினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

இதுகுறித்து திருநள்ளாறு பொதுமக்களிடம் விசாரித்தோம், "அமைச்சர் கமலக்கண்ணன் மீது எங்களுக்குப் பெரிய வெறுப்பு எல்லாம் கிடையாது. அவரால் முடிந்ததை செய்துகொடுத்துள்ளார். காங்கிரசையும், அமைச்சரையும் செயல்பட விடாமல்  பாஜக முகமாகவே இருந்த ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு பாண்டிச்சேரி மாநிலத்தையே முடக்கிவிட்டனர். இது பாண்டிச்சேரி மொத்த மக்களுக்குமே தெரியும். அதேபோல சுயேச்சையாக போட்டியிடும் சிவா நான்கரை ஆண்டுகளாக தொகுதி பக்கமே தலைகாட்டாமல், பெங்களூருவில் இருந்துவிட்டு தேர்தலுக்காக வந்திருக்கிறார். அதேபோல ஜி.என்.எஸ்.ராஜசேகரனும் திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்தவர் கிடையாது. நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்தவர். தொகுதி மாறி போட்டியிடுகிறார். ராஜசேகரன் சாதாரண ஆளில்லை புதுவை அரசின் ஓராண்டு பட்ஜெட் ரூ.8,000 கோடி என்றால் இவருடைய சொத்து மதிப்பீடு 80 ஆயிரம் கோடி, அப்படிப்பட்ட கோடிஸ்வரர் சாதாரண அடிதட்டு மக்கள் வாழுகின்ற தொகுதியில் போட்டியிடுவதே பெரிய உள்நோக்கம் தான். 

 

இவர், எம்,எல்,ஏ ஆனால் பொதுமக்கள் அவரை நெருங்கிட முடியுமா. அவர் பணத்தால் வெற்றிபெற்றுவிடலாம் என்கிற திட்டத்தோடு தொகுதியில் உள்ள வாக்காளர்களில் 80 சதவிகித வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் பணம், தங்க நாணயம், கொடுத்துவிட்டார். எஞ்சிய நாணயத்தை மட்டுமே பிடித்துள்ளனர். அவரது செல்வாக்கு மேல்தட்டு மக்களுக்கு பயன்படுமே தவிர தொகுதியில் நிரம்ப இருக்கு அடிதட்டு, சிறுபாண்மை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்காது" என்கிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.