Skip to main content

எடப்பாடிக்கு எந்த அருகதையும் இல்லை; நெசவாளர் அணி செயலாளர் பதிலடி

Published on 13/12/2022 | Edited on 14/12/2022

 

 

h

 

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்  14 ந் தேதி அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் ஆத்தூரில் 13ந் தேதி அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் மிகுந்த கோபத்தில் பேசியதாவது, "தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மழையைக் கண்டோ, இந்த அரசைக் கண்டோ பயப்படுகிற கூட்டம் அதிமுக அல்ல. நாளைய தினம் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்களுக்கு முடிசூட்டு விழா நடக்கிறது. என்ன நடக்கிறது முடிசூட்டு விழா நடக்கிறது. மிகப்பெரிய தியாகத்தை செய்த செம்மல், நாட்டுக்கு உழைத்த மாமனிதன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்; அவருக்கு நாளைக்கு முடிசூட்டு விழா நடக்கிறது.

 

கருணாநிதி அவர்கள் முதல்-அமைச்சராக இருந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய மகன் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனார். அவருக்கு அடுத்து மு.க.ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதியை திமுகவின் தலைவர்களில் ஒருவராகக் கொண்டு வருவதற்குத்தான் அந்த முடிசூட்டு விழா.  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா என்ன? ஏற்கனவே எல்லாத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் வந்தால் அந்த ஊழலுக்கு எல்லாம் தலைவராகச் செயல்படுவார். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்; வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். ஏனென்றால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காத ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி. குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

Edappadi has no right to criticize udhayanidhi stalin
சச்சிதானந்தம்

 

மாநிலத்துக்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார். ஆனால், தமிழகத்துக்கு 4 முதலமைச்சர்கள் உள்ளனர். மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி, அவருடைய மகன், அவருடைய மருமகன் ஆகியோர்தான் 4 முதலமைச்சர்கள். திமுக என்றால் குடும்ப ஆட்சி; குடும்ப கட்சி; அது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவில் விசுவாசமாக இருந்தால், உழைப்பவர் எவராக இருந்தாலும் அவருடைய வீட்டுக் கதவைத் தட்டி பதவி கொடுக்கின்ற கட்சி அதிமுக. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கூட எம்.எல்.ஏ, அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், முதலமைச்சர் கூட ஆகக்கூடிய கட்சி அதிமுக.” இவ்வாறு அவர் கூறினார்.

 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சிற்கு அதே கொங்கு சமூகத்தில் உள்ள, தி.மு.க.வின் நெசவாளர் அமைப்பு மாநிலச் செயலாளர் எஸ்.எல்.டி. சச்சிதானந்தம் பதில் கூறும்போது,

 

"எடப்பாடி பழனிசாமி என்பவர் யார்?  அதிமுகவின் ஆட்சிக் காலத்தில் அதன் முதல்வராக இருந்த ஜெயலலிதா இருக்கும்போது இந்த எடப்பாடி பழனிசாமி யார் என்று யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் ஜெயலலிதா இறந்த பிறகு அவருடைய பினாமியாகச் செயல்பட்ட சசிகலா தனக்கு விசுவாசம் மிக்க ஒரு பினாமியாக இந்த எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர்த்தி விட்டு, அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறைக்குச் சென்றார்.  இந்த எடப்பாடி பழனிசாமி எந்தப் பின்புலமும் இல்லாதவர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு எல்லோரையும் கொள்ளை அடிக்க வைத்து திருட வைத்து மூன்று ஆண்டுகள் அந்த ஆட்சியை நடத்தினார். அப்பொழுது அவருடைய மகன் அந்தக் குடும்பம் என அனைவரையும் கொள்ளை அடிக்க வைத்தவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி. இவர் கூறுவது போல வாரிசு அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்காக இல்லை. 

 

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் காலத்தில் தொடங்கி தொடர்ந்து அரசியலில் இயங்கக்கூடிய அனைவரும் அவர்களுக்கானத் தகுதியைப் பெற்று வருகிறார்கள். தற்போது முதலமைச்சராக இருக்கிற தலைவர் தளபதி அவர்களும் சிறுவயது முதல் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதனுடைய போராட்டங்களில் பயணித்து அவர் தகுதி அடிப்படையில்,
இப்போது  முதல்வராக இருக்கிறார். திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் எனக்குத் தெரிந்து இரண்டு மூன்று தேர்தலில் அவர் மிகுந்த சிரமங்களைத் தாங்கி தமிழ்நாடு முழுக்க ஊர் ஊராகச் சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக உழைத்தவர். இப்போது எம்எல்ஏக்கள் எம்பிக்களாக இருப்பவர்கள் பலருக்கும் அவருடைய உழைப்பின் மூலம் பயன்பெற்றுத் தேர்வானவர்கள்.

 

இந்த நிலையில் அரசியலில் ஒவ்வொன்றாகத் தொடங்கி மேலுக்கு வந்த திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இப்போது கொடுக்கப்படுகிற மரியாதை இதுவே காலம் தாழ்ந்தது. இந்த நிலையில் இதைப் பற்றிப் பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை. அந்த எடப்பாடி பழனிச்சாமி யார்...? அந்த எடப்பாடி பழனிசாமி எந்தப் பின்புலமும் இல்லாமல் இவ்வளவு தூரம் பேசுவது கேவலமானது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிப் பேசத் தகுதி இல்லாத நபர் " என்றார்"

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

''விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்''- அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
"May his people succeed in their work" - Udayanidhi wishes

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சிப் பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த அமைச்சர் உதயநிதியை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிளித்த அவர், 'இந்திய ஜனநாயகத்தில் யாரும் அரசியல் கட்சி இயக்கம் தொடங்கலாம். அதற்கான உரிமை இருக்கிறது. நடிகர் விஜய் அந்த முடிவை எடுத்திருக்கிறார். அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வோம். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்'' என்றார்.