Skip to main content

திமுகவின் திட்டத்தை பின்பற்றும் எடப்பாடி... அதிமுகவில் சீனியர்களுக்கு அடிக்க போகும் அதிஷ்டம்!  

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

திருச்சி மாவட்டத்தைத் தங்கள் கட்சி சார்பில் மூன்றாகப் பிரித்து, தனித்தனி மா.செ.க் களை முதலில் நியமித்தது தினகரனின் அ.ம. மு.க. கட்சி தான் என்கின்றனர். இதேபாணியில் அண்மையில் தி.மு.க.வும் திருச்சி தி.மு.க.வை மூன்று மாவட்டமாக பிரித்து அன்பில் மகேஷுக்கும் மா.செ.பதவியைக் கொடுத்தனர். இதையெல்லாம் கூர்ந்து கவனித்த அ.தி.மு.க.வும் தற்போது திருச்சியை மூன்றாக பிரித்து, உபரி மா.செ.வாக  பரஞ்ஜோதியை நியமித்துள்ளனர். 
 

admk



இதே பாணியில் தமிழகத்தின் அத்தனை மாவட்டத்திலும் ஒரு புது மாவட்டத்தை உருவாக்கவும், பலரையும் மா.செ.வாக்கும் முடிவிலும் எடப்பாடி இருப்பதாக சொல்கின்றனர். இதனால் அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலை தடுக்கவும், அதிமுகவில் இருக்கும் கட்சி பதவி கிடைக்காத சீனியர்களுக்கு பதவி கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் எடப்பாடி இறங்கியுள்ளதாக சொல்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்