Published on 18/12/2018 | Edited on 18/12/2018

பிளவுப்பட்ட கூட்டணியைத்தான் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்னிறுத்தினார். இதனை கூட்டணிக் கட்சிகள் ஒரு கட்சிக்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. மம்தா பானர்ஜி என்ன சொல்கிறார். முன்கூட்டியே ராகுல்காந்தியை நிறுத்தினால் பிளவு ஏற்படும். முன்னாலேயே கூட்டணியில் பிளவு ஏற்படும் என்றால், கூட்டணி அமைத்துவிட்டு பின்னால எப்படி முடிவு செய்வார்கள். இதனை மக்கள் நன்றாக உணர வேண்டும். பிளவுப்பட்ட கூட்டணிதான் எதிர்க்கட்சி கூட்டணி. ஸ்டாலின் முன்னுறித்தியது தவறான ஒரு பிரதமர் வேட்பாளர் என்பதை வருங்காலம் உணர்த்தும். இவ்வாறு கூறினார்.