Skip to main content

‘’போராட்டத்தில் என் இடுப்பைக் கிள்ளினார்’’ - அனலாக கொதிக்கும் மகளிரணி துணைத்தலைவி 

Published on 06/04/2018 | Edited on 06/04/2018
jeyamani

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க சார்பாக கரூர் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அவர்களை கைது செய்த போலீஸார் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை அடைத்தனர். அதுவரை பிரச்னை இல்லை. ஆனால், அதன்பிறகு அந்த மண்டபத்தில் தனக்கு தி.மு.க மாணவரணியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் தனது இடுப்பைக் கிள்ளி, தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தி.மு.க மாவட்ட மகளிரணி துணைத்தலைவி ஜெயமணி கிரிவாசன் எழுப்பிய குற்றச்சாட்டு அனலாகக் கொதித்துக் கொண்டிருக்கிறது.

 

jeyamano kirivasan

 

தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபாகரன் மீது மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும், நகரச் செயலாளர் கனகராஜூம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லி, மண்டபத்துக்கு எதிரிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினார். அதோடு, பிரபாகரன் மீது வெங்கமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அதன்பிறகு, பிரச்சனை பெரிதாவதை தடுக்க, அங்கே இருந்த ஜெயமணியின் கணவர் கிரிவாசனை அழைத்து நகரச் செயலாளர் கனகராஜ் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்த முயன்றார். ஆனால், அதற்குள், தன்னைப் பிரபாகரன் ஆட்கள் தாக்கிவிட்டதாக கிரிவாசன் குற்றம் சாட்டினார். இதனால் பிரச்சனை நீண்டது.

இது குறித்து ஜெயமணி கிரிவாசனிடம் பேசினோம்.  அவர்,  ’’எங்களை கைது பண்ணி மண்டபத்துல வெச்சுருந்தாங்க. அப்ப பிரபாகரன் என் இடுப்பைக் கிள்ளினார். எனக்கு அதிர்ச்சியாயிட்டு. உடனே, இரண்டு ஆண்களை கடந்து அந்தப் பக்கம் போய் நின்னுகிட்டேன். அங்கே நின்ன நகரச் செயலாளர், மாவட்டச் செயலாளர்கிட்ட புகார் சொன்னேன். ஆனா, பிரபாகரன் மீது அவங்க நடவடிக்கை எடுக்கலை. ரெண்டு பேரும் என் வளர்ச்சியைப் பிடிக்காம இப்படி பிரபாகரனை தூண்டிவிட்டிருக்காங்க. கரூர் தி.மு.கவுல பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. இந்த நிலை தொடர்ந்தால், நாங்கள் கட்சி மாறுவோம். தளபதி இதுல தலையிட்டு நடவடிக்கை எடுக்குற வரைக்கும்  ஓயமாட்டேன்’’ என்றார் ஆக்ரோஷமாக.

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.