Skip to main content

கரோனா - மக்களுக்கு உணவு வழங்க களமிறங்கும் ஐ-பேக்! 

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

தேசம் முழுவதும் 21 நாள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 11 நாளை கடந்திருக்கிறது. இந்த நிலையில், வீடிழந்த ஏழைகள், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் பசியைப் போக்க, அவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் 'அனைவருக்கும் அன்னம் ' எனும் சேவையை நாளை முதல் 10 நாட்களுக்கு தமிழகத்தில் துவக்குகிறது, அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம். 

 

Prashant Kishor -



 

இந்தியாவில்  25 பெருநகரங்களில் தினமும் 1 லட்சத்து 50 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் மூலம் 10 நாட்களில் 15 லட்சம் உணவுப் பொட்டலங்களை வழங்குகிறது ஐ-பேக்! 

இதற்காக தகுதியான உணவு நிறுவனங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்படுகிறது. தன்னார்வலர்கள் உதவியுடன் அந்த உணவுப் பொட்டலங்களை  பசியால் வாடும் மக்களுக்கு வழங்கவிருக்கின்றனர். 

இந்த சேவையை நாளை முதல் (5.4.2020) துவங்கிறது ஐ- பேக் !
 

 

சார்ந்த செய்திகள்