Skip to main content

பாஜக சொன்ன புதிய பார்முலா... இ.பி.எஸ்.சிடம் சொன்ன ஓ.பி.எஸ்...

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

 

ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க முயற்சி செய்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்துக்கு இடம் கிடைக்க முயற்சித்தார். இந்த மோதலில் மத்திய அமைச்சரவையில் யாருக்கு இடம் என்பது முடிவாகாமல் இருந்து வருகிறது. மே 30ஆம் தேதி பதவியேற்ற மத்திய அமைச்சரவையில் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் டெல்லியிலேயே இருந்த ஓ.பி.எஸ்.ஸிடம் ஒரு புதிய பார்முலாவை பாஜக சொன்னதாம். அதன்படி டெல்லியில் இருந்து வந்த ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதனை தெரிவித்திருக்கிறார். 

 

eps-ops



வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக்கிடுங்கள். அதோடு சி.பி.ராதாகிருஷ்ணனையும் ராஜ்யசபா உறுப்பினராக்கிடுங்கள். அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இரண்டு இடங்கள் தருவதாக பாஜக சொன்னதாக தெரிவித்திருக்கிறார். 
 

 

இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் பாஜக கடும் கோபத்தி உள்ளதாம். மத்திய அமைச்சரவைடியில் இரண்டு பேருக்கு இடம் அதில் ஒன்று ரவீந்திரநாத் குமார், இன்னொன்னு வைத்திலிங்கம் என்றாலும் பாஜகவுக்கு இரண்டு ராஜ்யசபா சீட் எப்படி கொடுப்பது. இங்கு கட்சியில் தம்பிதுரை, மைத்ரேயன், கே.பி. முனுசாமி, மனோஜ்பாண்டியன் என 10க்கும் மேற்பட்டோர் பதவி கேட்டுள்ளனர். இரண்டு ராஜ்யசபா சீட் பாஜகவுக்கு, ஒன்று ஏற்கனவே பேசியப்படி பாமகவுக்கு கொடுத்துவிட்டால் அதிமுக என்ற கட்சி எதற்கு என்று கட்சியினரே கேட்பார்களே? என சீனியர்கள் பேசி வருகிறார்கள். 


 

 

ராஜ்யசபா தேர்தலில் இடம் தராவிட்டால் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்கிறது பாஜக. மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் இல்லை என்றால் அதிமுக உடையும் என்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். இப்படி இடியாப்பச் சிக்கலில் உள்ள அதிமுக, எந்த நகர்வை மேற்கொண்டாலும் சேதமடைவது உறுதி. இந்த சூழ்நிலையை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிப்பார் என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.