Skip to main content

உ.பி., பீகார் மக்களவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துள்ளது. 

 

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்திலும், பீகார் மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கும் கொண்டுள்ளது பா.ஜ.க. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொகுதியான கோரக்பூர், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் தொகுதியான பூல்பூர் மற்றும் பீகாரின் அராரியா ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றது. 

 

Yogi

 

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. ஆனால், அடுத்ததடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையில் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது மூன்று தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்துள்ளது.

 

Akhi

 

கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் பிரவீன் நிசாத் பா.ஜ.க.வின் உபேந்திர தத் சுக்லாவை 21,916 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின்  நாகேந்திர சிங் படேல் பா.ஜ.க.வின் கஸ்லேந்திர சிங்கை 59,613 பீகாரின் அராரியா தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சர்ஃபராஜ் அலாம் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க.வின் பிரதீப் குமார் சிங்கை 57,358 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 

 

இந்தத் தோல்வி குறித்து பரிசீலனை செய்வோம் என்று கூறியுள்ள யோகி ஆதித்யநாத், சந்தர்ப்பவாத கூட்டணி என சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதேசமயம், ‘சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பா.ஜ.க.வின் மக்கள்விரோதக் கொள்கைகளுக்கு மக்கள் தேர்தல் மூலம் பதிலளித்திருக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

 ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Incident happened 6 people for Terrible fire at hotel in patna

பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் இன்று (25-04-24) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் சிக்கினர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு படுகாயமடைந்திருந்த 20க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.