Skip to main content

மோடிக்கு முட்டாள்கள் தின வாழ்த்துகள்! - ஜிக்னேஷ் மேவானி கிண்டல்

Published on 01/04/2018 | Edited on 01/04/2018

பிரதமர் மோடிக்கு முட்டாள்கள் தின வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி கிண்டலாக தெரிவித்துள்ளார்.

 

குஜராத் மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜிக்னேஷ் மேவானி. இவர் தலித்துகளுக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டை முன்னிறுத்தி அரசியலில் களம் காண்பவர். 

 

இந்நிலையில், இன்று ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நரேந்திரமோடி முட்டாள்கள் தினத்தை புதிய உச்சத்திற்கு தூக்கிச் சென்றவர். சொல்லப்போனால், இன்றைய தினமே அவருக்கானதுதான். கூச்சமேயில்லாமல் தொடர்ந்து பல போலி வாக்குறுதிகளைத் தந்து, அதன்மூலம் அவர் வரலாறு படைப்பார் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். நரேந்திர பாய்.. எங்களது வாழ்த்துகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சாதியை தூக்கி குப்பை தொட்டியில் எறிய வேண்டும்; சென்னை விழாவில் ஜிக்னேஷ் மேவானி பேச்சு...

Published on 29/12/2018 | Edited on 29/12/2018

 

SDVza

 

இயக்குனர் பா.ரஞ்சித் நடத்திவரும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை மைலாப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் குஜராத் எம்.எல்.ஏ வும், சமூக செயல்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானி கலந்துகொண்டார். சமூக மாற்றத்திற்கான விழா என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய ஜிக்னேஷ் மேவானி சாதிகளை தூக்கி குப்பைத்தொட்டியில் எறிய வேண்டும் என பேசினார். மேலும் அவர், 'ஜாதியை ஒட்டு மொத்தமாக குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும். மதச்சார்பற்ற சமூகத்தை மதிக்கும் நிலையில் அரசில் உள்ளவர்கள் இல்லை; சாதி ரீதியாக தான் இங்கு எல்லாம் இன்றும் நடந்து வருகிறது. இதனை மாற்ற வேண்டும். மேலும் இதற்காக பாடுபட்ட பெரியாருக்கு எனது வீர வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்' என கூறினார்.

 

 

Next Story

ஒன்றுகூடிய எதிர்க்கட்சி தலைவர்கள் தூத்துக்குடி செல்லவேண்டும்! - ஜிக்னேஷ் மேவானி

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அனைவரும் தூத்துக்குடி செல்லவேண்டும் என குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

jignesh

 

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் முந்தைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்காதவண்ணம் ம.த.ஜ. கட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்தது. பல்வேறு அரசியல் களேபரங்களுக்குப் பிறகு, கர்நாடகாவின் 24ஆவது முதலமைச்சராக குமாரசாமி நேற்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மாற்றுக்கொள்கைகளைக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த ஒருங்கிணைப்பு மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு அடுத்த தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
 

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, ‘இன்று குமாரசுவாமி அவர்களின் பதவியேற்பு விழாவில் ஏதேச்சாதிகார பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டில் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்’ என நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை வாய்திறக்கவில்லை. அவரது இந்த மவுனம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஜிக்னேஷ் மேவானியின் இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.