Skip to main content

கோவையில் அவர்கள் கால் பதிக்க முடியாது... -எம்.எல்.ஏ நா.கார்த்திக் அதிரடி

Published on 26/01/2019 | Edited on 26/01/2019
dmk mla n.karthik



கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்எல்ஏ நா.கார்த்திக் நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். 
 

கோவையில் திமுக சுத்தமாக இல்லை. கொங்கு மண்டலம் முழுவதும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று அதிமுக கூறுகிறதே? 
 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்தது. அப்படியிருந்தும் கிணத்துக்கடவு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. என்னுடைய சிங்காநல்லூர் தொகுதியிலும் அதிமுக சார்பில் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டது. அதையும் மீறி ஐந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். 
 

கொங்கு மண்டலத்தில் திமுக வலிமையாக உள்ளது. மாற்றுக் கருத்து சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு கொங்கு மண்டலத்தில் திமுகவுக்குதான் ஆதரவு இருக்கிறது என்று தேர்தல் முடிவுகள் சொல்லும். 
 

இறங்கி வேலை செய்கிறோம். மக்கள் பிரச்சனைகள் தீர்க்கிறோம். ஓட்டு போடும்போது அவர்கள் எங்களைத்தான் நினைப்பார்கள் என்கிறார்களே அதிமுக எம்எல்ஏக்கள்? 
 

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் இருக்கிறது. அதில் சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் வருகிறது. அதைத் தவிர தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் தொகுதிகளில் பாதி வருகிறது. ஏழத்தாழ ஆறு தொகுதிகள் கோவை மாநகராட்சியில் உள்ளது. 
 

கோவை மாநகராட்சி முழக்க சாலை பிரச்சனை, குப்பைகள் எடுப்பதில்லை, சாக்கடைகளை சுத்தம் செய்வதில்லை, எந்தவித கட்டுமானப்பணிகளும் நடக்கவில்லை. கோவையில் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் ஜி.எஸ்.டி.யால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை அதிமுக எம்.பி. தொகுதிப் பக்கமும் வருவதில்லை. பாராளுமன்றத்தில் தொகுதி மக்களுக்காக குரலும் கொடுப்பதில்லை. 
 

குடிநீருக்கு ரூபாய் 4 ஆயிரம் டெபாசிட் கட்ட வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்தது. அதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தோழமைக் கட்சிகளுடன் இணைந்து திமுக தொடர் போராட்டம் நடத்தியது. முழுக்க முழுக்க நாங்கள் பொதுமக்கள் பிரச்சனைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். கோவை மக்கள் பிரச்சனைகளுக்காக வரலாறு காணாத வகையில் போராட்டம் நடத்தியிருக்கிறோம். கோவையில் மக்கள் பிரச்சனைக்காக வாரத்திற்கு இரண்டு நாள் மாநகராட்சி ஆணையரை சந்திக்கும் சட்டமன்ற உறுப்பினர் நானாகத்தான் இருப்பேன். ஆகையால் திமுக தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் கோவையில் திமுக வெற்றி உறுதி. 
 

பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி என்கிற பேச்சு நிலவுகிறது. அதிலும் கோவையை பாஜக குறி வைத்துள்ளதாமே?
 

மோடி வந்தால் நிறைய மாற்றங்கள் வரும் என்று தொழில் நடத்துபவர்கள் நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை இப்போது தொழில் நடத்துபவர்கள், பொதுமக்கள் இழந்து விட்டனர். இந்த நான்கரை ஆண்டு கால பாஜக ஆட்சி கோவை நகரத்துக்கு சொல்லும்படியாக எந்த திட்டத்தையும் தரவில்லை. தொழில்துறை செழிப்படையும் அளவிற்கு எந்த ஆதரவையும் அவர்கள் செய்யவில்லை. பாஜகவை நிராகரிக்க கோவையில் எல்லா தரப்பு மக்களும் தயாராக இருக்கிறார்கள். அதேபோல் அதிமுக அரசை கேலிக்கூத்தாக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பாஜக, அதிமுக மீது கோவை மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் இணைந்தாலும் இவர்களை வீழ்த்துதற்கு திமுக வலிமையோடு உள்ளது. கோவையில் பாஜக கால் பதிக்க முடியாது. அதற்கு தேர்தல் முடிவு சாட்சியாக இருக்கும். 
 

கோவை திமுகவில் கோஷ்டி பூசல்கள் அதிகமாக இருப்பதாகப் பேச்சு நிலவுகிறதே?
 

நாங்கள் எல்லோரும் தலைவர் அணிதான். அணிகளாக பிரிந்து செயல்படும்படியான நிலை மாவட்டத்தில் எங்கும் இல்லை. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.