Skip to main content

கமுக்கமாக நடந்த  ‘கப்சிப்’ போராட்டம்! - சிவகாசி காங்கிரஸின் சீரியஸ் கலாட்டா!

Published on 20/05/2022 | Edited on 20/05/2022

 

congress condolence in sivakasi

 

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜீவ்காந்தி, தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் 1991-ல் குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து 14 பேர் கொல்லப்பட்டனர். இக்கொலைச்சதி வழக்கில் கைதான 7 பேரில், உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பேரறிவாளன் விடுதலையானார். 

 

இந்நிலையில், நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக்கொண்டு, உங்களுடைய பகுதியில் முக்கியமான இடத்தில்,  ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையைக் கையில் பிடித்துக்கொண்டு, அறப்போராட்டம் நடத்துங்கள் என அறிக்கை வாயிலாகக் கேட்டுக்கொண்டார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி.

 

congress condolence in sivakasi
மாணிக்கம்தாகூர்

 

சீரியஸான இந்த விவகாரத்தை சிவகாசியிலும் காமெடியாக்கிவிட்டனர், கதர்ச்சட்டையினர். எப்படி தெரியுமா?

 

congress condolence in sivakasi
அசோகன் 

 

இத்தனைக்கும் சிவகாசி சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியின் எம்.பி. மாணிக்கம்தாகூரும் காங்கிரஸ்காரர்தான். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகனும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். இப்படியொரு வலுவான பின்னணி இருக்கும்போது, சிவகாசியில் மிகவும் குறைந்த அளவிலேயே அறப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். 


 
இந்தப் போராட்டத்தில், சிவகாசி நகர காங்கிரஸ் தலைவர் குமரனோ, எம்.எல்.ஏ. அசோகனோ கலந்துகொள்ளவில்லை. அதனால், ‘மாபெரும்(?) சாலை மறியல் நடந்துகொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ.அசோகன் எங்கிருந்தாலும் ரோட்டுக்கு வரவும்..’ என்று வலைதளங்களில் கேலி பேச ஆரம்பித்தனர்.  

 

congress condolence in sivakasi
குமரன்

 

நாம் சிவகாசி நகர காங்கிரஸ் தலைவர் குமரனைத் தொடர்புகொண்டோம். “பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு வந்தவுடன், காங்கிரஸில் ஒரு கோஷ்டி தன்னிச்சையாக  நேற்று (18-ஆம் தேதி) நடத்திய போராட்டம் அது. போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக உட்கார்ந்திருக்கிறார்கள். மற்றபடி, சிவகாசியில் அவரவர் இருக்கும் இடத்தில் வாயில் துணியைக் கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தாமல் இல்லை. சிவகாசி போலீசார் அனுமதியளிக்கவில்லை. அதனாலேயே, நகரின் முக்கிய இடத்தில் போராட்டம் நடத்தமுடியவில்லை இன்னொரு விஷயம், ஆளும்கட்சியான திமுகவை அனுசரித்து நகர் நலனில் அக்கறை செலுத்திவருகிறோம். அதனால், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் முடிகிறது. பெரிய அளவில் போராட்டம் நடத்தி திமுகவை பகைத்துக்கொள்ள வேண்டுமா?” என்று விளக்கம் தந்தார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.