Published on 26/03/2018 | Edited on 26/03/2018

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பிக்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் ராஜினாமா கடிதம் அளிப்பார்கள் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு மறுத்து வருவதால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. மேலும், தெலுங்கு தேச கட்சி எம்பிக்களும் ராஜினாமா செய்ய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.