Skip to main content

இணையதள காதல்; இளைஞருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - பகீர் பின்னணி

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
young woman who cheated a young man by falling in love through the Internet

டெல்லியில் சிவில் தேர்விற்கு படித்துவரும் போட்டித்தேர்வாளர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் வெர்ஷா என்ற பெயர் கொண்ட ஐடியில் பெண் ஒருவர் பேசி பழகியுள்ளார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்துக்கொண்டு பழகி வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி வெர்ஷா தனக்கு பிறந்தநாள் என்று தன்னுடன் டின்டர் ஆப்பில் பழகி வந்த போட்டித்தேர்வாளரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் வாழ்த்து தெரிவிக்க, இருவரும் சந்தித்து பிறந்த நாள் கொண்டாடலாம் என்று காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு சிவில் தேர்விற்கு படித்துவரும் போட்டித்தேர்வாளரும் சம்மதம் தெரிவிக்க, விகாஸ் மார்க்கில் உள்ள பிளாக் மிரர் கஃபேவில் இருவரும் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அப்போது, வெர்ஷாவிற்கு போட்டித்தேர்வாளர் ஸ்நாக்ஸ், ஆல்கஹால் சேர்க்காத பானங்களை ஆர்டர் செய்துள்ளார். இதன் மதிப்பு சில ஆயிரங்கள் தான் இருக்கும். ஆர்டர் செய்த உணவு டேபிளுக்கு வர இருவரும் பேசிக்கொண்டு உணவருந்தி பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது, திடீரென வெர்ஷா தனது குடும்பத்தில் பிரச்சனை என்று கூறி டேட்டை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பியுள்ளார். உடனே, அவசரம் என்பதால் வெர்ஷாவை அனுப்பி வைத்த போட்டித்தேர்வாளர் கஃபேவில் பில் செலுத்த சென்றுள்ளார். 

அப்போது, 1.2 லட்சத்திற்கான பில்லை பிளாக் மிரர் கஃபே நிர்வாகத்தினர் கொடுத்ததைப் பார்த்து அதிர்ந்துபோனவர் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், கஃபே நிர்வாகத்தினர் பணத்தை செலுத்தாமல் இங்கிருந்து நகர கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ந்துபோனவர் வேறுவழியின்றி ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டு நடந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில்தான் மிகப்பெரிய மோசடி பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. சம்பவம் நடைபெற்ற பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் சேர்ந்து நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட போட்டித்தேர்வாளரிடம் டிண்டர் ஆப் மூலம் டேட் செய்த வெர்ஷா என்ற பெண்ணும் இவர்களின் கூட்டாளி என்பதை போலீசார் கண்டறிந்தனர். பிளாக் மிரர் கஃபேவில் மேலாளராகப் பணிபுரியும் ஆர்யன் என்பவர் வெர்ஷாவை, டிண்டர் செயலி மூலம் போலியான கணக்கை உருவாக்கி சிவில் தேர்விற்கு படித்து வந்த போட்டி தேர்வாளரை மோசடி வலையில் வீழ்த்தி பணத்தை ஏமாற்றியுள்ளார். அதுபோல, வெர்ஷாவின் உண்மையான பெயர் அஃப்சான் பர்வீன் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். 

இந்த மோசடி கும்பலானது டிண்டர் ஆப் மூலம் இளைஞர்களை டேட்டிங் வரவழைத்து மோசடி செய்து வந்துள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தை வெர்ஷாவிற்கு15 சதவிகிதமும், உதவும் மேலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் 45 சதவிகிதமும், மீதமுள்ள 40 சதவிகிதம் கஃபே உரிமையாளர்களுக்கும் பிரித்துக்கொண்டு ஏமாற்றியது போலீஸ் விசராணையில் தெரியவர போலீசார் மோசடியில் தொடர்புடையவர்களை கைது செய்தனர். ஆனால், வெர்ஷா தப்பித்த நிலையில், போலீசார் அவரை தீவிரமாக் தேடினர். அவர், ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்ததை அறிந்த போலீசார் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மருத்துவமனைக்கு வரும் பெண்களுக்குக் குறி; அத்துமீறும் செவிலியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
male nurse was involved in scamming women who came to the hospital

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ளது ஆலமரத்துப்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட பாப்பாரப்பட்டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், ராணுவ வீரர் மனைவியைக் குழந்தைகளுடன் கடத்தியதாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வந்த அதியமான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

39 வயதான அதியமான் கடத்தூா் அருகே உள்ள மடதஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி செய்து வந்துள்ளார். அப்போது, நோயாளிகளை பார்க்க வந்து செல்லும் பெண்களை அதியமான் குறிவைத்து பேசி வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான உதவிகளை மருத்துவமனையில் செய்து தனது செல்போன் எண்ணை கொடுத்து நெருங்கி பழகி வந்துள்ளார். எப்போது வேண்டும் என்றாலும், எந்த உதவி வேண்டும் என்றாலும் அழைக்கலாம் என்று நம்பிக்கையானவர் போல் தன்னை காட்டிக் கொண்டுள்ளார். இதனால், மருத்துவமனைக்கு வரும் பலருடன் அதியமானுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட  அதியமான் நீதிமன்றங்களில் வேலை பெற்று தருவதாக கூறி, பலரிடம் பணத்தை வாங்கியுள்ளார். பின்னர், போலியாக பணி நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுவரை இவரிடம் இராணுவ வீரரின் மனைவி, கணவனை இழந்தப் பெண் என மொத்தம் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வேலைக்காக கொடுத்து இழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பலரிடம் அதியமான் கைவரிசை காட்டியிருப்பார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண்களை மட்டும் குறிவைத்து பழகும் அதியமான் சிலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இப்படி, மோசடி பேர்வழியாக இருக்கும் அதியமானுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை திசை மாற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி, அதன் மூலமும் தனியார் மருத்துவமனையில் அதியமான் கமிஷனை பெற்றதை அறிந்த போலீசார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோசடி மன்னன் அதியமான் மருத்துவமனைக்கு வந்த பெண்களிடம் 25 லட்சத்திற்கு மேல் பணத்தை ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி மருத்துவமனை ஊழியா் ஒருவர் பண மோசடி, பாலியல் ஆத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சிறுமியைத் திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞர்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
young man who married the girl

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற முகமது ஆதம். இவர் சிறுமியை திருமணம் செய்ததாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் முகமது ஆதம் 17 வயது  சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தச் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் முகமது ஆதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The website encountered an unexpected error. Please try again later.