Skip to main content

சகோதரி மீது அதிகம் பாசம் வைத்திருந்த தாய்; ஆத்திரத்தில் இளம்பெண் செய்த காரியம்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
A young woman theft in her houst for her mother who was very fond of her sister in delhi

டெல்லி உத்தம் நகர் சேவக் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், கமலேஷ் தனது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘கடந்த மாதம் 30ஆம் தேதி அன்று, தான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளை போனது’ என்று தெரிவித்திருந்தார். 

அவர் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து சோதனை செய்தனர். அப்போது அந்த சிசிடிவி பதிவில், புர்கா அணிந்த ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியது தெரியவந்தது. 

மேலும், அந்த பதிவில் புர்கா அணிந்த பெண் அப்பகுதியின் பொதுக்கழிவறை ஒன்றில் இருந்து வெளியே வருவதை கண்டுள்ளனர். அதே வேளையில், கமலேஷின் மூத்த மகளான ஸ்வேதா (31) என்பவர் அந்த பொதுக்கழிவறையில் நுழைந்ததையும், அவர் வெளியே வராததையும் உறுதி செய்தன. எனவே, கழிவறைக்குள் நுழைந்த ஸ்வேதா புர்கா அணிந்து வெளியே வந்து தனது சொந்த வீட்டில் திருடியுள்ளார் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து, கமலேஷின் மூத்த மகளான ஸ்வேதாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தான் திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையில், தன்னை விட தனது தங்கை மீது தாய் கமலேஷ் அதிகம் பாசம் வைத்திருந்ததால் ஸ்வேதா கோபமாக இருந்துள்ளார். மேலும், தனது சகோதரியின் திருமணத்திற்காக அதிகளவில் நகைகள், ரொக்க பணம் ஆகியவற்றை கமலேஷ் சேகரித்து வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஸ்வேதா, தனது தங்கையை பழிவாங்குவதற்காக, தங்கைக்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருட திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, சம்பவத்தன்று கமலேஷ் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து புர்கா அணிந்து வந்து பொருட்களை திருடிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. சகோதரி மீது தாய் அதிகளவில் பாசம் வைத்திருந்ததால் தனது சொந்த வீட்டில் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான் என்பவர் தனது கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.