Skip to main content

இன்றே விமானப்படை அதிகாரி ஆஜராக வேண்டும்- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

Published on 14/11/2018 | Edited on 14/11/2018

 

ரஃபேல் போர் விமான முறைகேடு குறித்து விளக்கமளிக்க விமானப்படை அதிகாரி உடனடியாக ஆஜராக வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார். விமானப்படை அதிகாரி இன்றே ஆஜராக வேண்டும் என்று விமானப்படைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தலைமை நீதிபதி, பாதுகாப்பு படை அதிகாரி தேவையில்லை, விமானப்படை அதிகாரியே தேவை என்று குறிப்பிட்டுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சத்தீஸ்கரில் உள்ள "ரபேல்" (Rafale) கிராமம் !

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

சத்தீஸ்கர் மாநிலத்தில் "ரபேல்" (Rafale) பெயரில் சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமம்  "மஹாசமுந்த் "மக்களவை தொகுதிக்கு உட்பட்டது . 2019 - ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து எதிர்கட்சிகளின் பரப்புரை என்பது "ரபேல்" தலைப்பு மட்டுமே. ஏனெனில் முந்தைய காங்கிரஸ் அரசு அரசு " ரபேல் போர் விமானத்தை" பிரான்ஸ் அரசிடம் வாங்க ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்ததை ரத்து செய்த பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு குறைந்த எண்ணிக்கையில் விமானங்களை வாங்கவும் , அதிக விலைகளை உள்ளிட்டக்கிய ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கையெழுத்திட்டனர். 

 

raffael



இந்நிலையில் இந்தியா சார்பில் ரிலையன்ஸ் குழுமம் தலைவர் அனில் அம்பானிக்கு சில ஒப்பந்தங்களை இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்திடம் கேட்டு பெற்று தந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 2014-2019 ஆண்டு வரை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதற்கு காரணம் "ரபேல்" விமான கொள்முதலில் பாஜக ஊழல் செய்ததாகவும் , ரிலையன்ஸ் குழுமம் தலைவர் அனில் அம்பானி அவர்களுக்கு முறைகேடாக ஒப்பந்தம் தந்துள்ளது என கூறி தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் விமான உற்பத்தியில் முன்னணியில் உள்ள பெங்களூர் " Hindustan Aeronautics Limited" நிறுவனத்ததிற்கு "ரபேல்" போர் விமான ஒப்பந்தம் தராமல் ஏன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பாஜக அரசு தந்தது என எதிர்கட்சிகள் இந்தியா முழுவதும் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் " ரபேல்" விமான பெயரில் இந்தியாவில் ஒரு கிராமம் உள்ளது என்பதை கண்டு மக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


பி.சந்தோஷ் , சேலம் .

Next Story

ரஃபேல் ஊழல் புத்தக வெளியீட்டுக்கு தடை – அச்சிட்ட புத்தகங்கள் பறிமுதல்!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ரஃபேல் விமான பேர ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் எழுதப்பட்ட புத்தகத்தை இன்று மாலை இந்து என்.ராம் வெளியிடவிருந்த நிலையில், அந்தப் புத்தக வெளியீட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பாரதி புத்தகாலயத்தின் விற்பனை நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த 200 புத்தகப் பிரதிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 

rafel

 

 

நெருக்கடி நிலைக்காலத்தில் எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. நெருக்கடி நிலையை கேலி பேசும் மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக குற்றம்சாட்டி வந்தனர். அரசுக்கு எதிராக எழுதுவதையோ, பேசுவதையோ சகித்துக்கொள்ளும் மனப்பான்மை மோடி அரசுக்கு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

“ரஃபேல் விமான பேர ஊழல் தொடர்பாக நீதிமன்றம் மூலமாக எந்த தடையும் இல்லாத நிலையில், அந்த ஊழல் தொடர்பாக ஹிண்டு நாளிதழ் வெளியிட்ட ஆதாரங்களின் அடிப்படையி எழுதப்பட்ட புத்தக வெளியீட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதாக” கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் நக்கீரனிடம் தெரிவித்தார்.