Skip to main content

மூதாட்டியைக் கொன்று தின்ற இளைஞர்!

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

 young man who incident the old woman

 

ராஜஸ்தானில் மூதாட்டியைக் கொன்று அவரது உடலை இளைஞர் ஒருவர் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ராஜஸ்தான் மாநிலம் சாராகா கிராமத்தில் மூதாட்டி ஒருவர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் அந்த மூதாட்டியைத் தாக்கிக் கொன்றுள்ளார். பின்பு அந்த மூதாட்டியின் உடலை அந்த இளைஞர் சாப்பிட்டு இருக்கிறார். இதனை அவ்வழியாகச் சென்ற சிலர் பார்த்து உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞரிடம் இருந்து மூதாட்டியின் உடலை மீட்டு அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் மும்பையைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் தாக்கூர் என்பதையும் கண்டுபிடித்தனர். பின்பு அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்