Published on 25/06/2022 | Edited on 25/06/2022

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும், அரசு பொறியியல் கல்லூரியின் சுவர் தொட்டாலே உதிர்ந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஷிம்செட் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரியை சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார். கல்லூரியின் சுவரைத் தொட்டபோது, அது பொலபொலவென உதிர்ந்து கீழே விழுந்துள்ளது, இந்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை விமர்சனம் செய்து சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், சிமெண்ட் இல்லாமல், கல்லூரி கட்டடம் கட்டப்பட்டு வருவது வியப்பளிக்கிறது என்றும், இது பாரதிய ஜனதா ஆட்சியின் ஊழலை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
भाजपा के राज में, घोर भ्रष्टाचार का कमाल है निराला
बिन सीमेंट, इंजीनियर कॉलेज की ईंटों को जोड़ डाला pic.twitter.com/q2iqFyCELX— Akhilesh Yadav (@yadavakhilesh) June 24, 2022