Skip to main content

"2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும்"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

"This victory will be echoed in the 2024 parliamentary elections" - Prime Minister Narendra Modi's speech!

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வெளியாகியுள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று, ஆட்சியமைக்கவுள்ளது. இதனை, அக்கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

 

இந்த நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், "உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் கிடைத்த வெற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். வரும் காலங்களில் பஞ்சாப் மாநிலத்தில் மாபெரும் சக்தியாக பா.ஜ.க. உருவெடுக்கும். பழைய பல்லவியைப் பாடாமல் அரசியல் வல்லுநர்கள் புதிய கண்ணோட்டத்துடன் சிந்திக்க வேண்டும். வளர்ச்சி மீது நம்பிக்கை வைத்து மீண்டும் பா.ஜ.க.வை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். சாதி அடிப்படையில் வாக்குச் சேகரிக்க முயன்ற கட்சிகளுக்கு மக்கள் பாடம் கற்பித்துவிட்டனர். 

"This victory will be echoed in the 2024 parliamentary elections" - Prime Minister Narendra Modi's speech!

மத்திய அரசின் முடிவுகளைக் குறைக்கூறுவதையே எதிர்க்கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவை எல்லாம்வற்றுக்கும் மக்கள் முடிவு கட்டுவார்கள். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் குறைக்கூறுகின்றன. பா.ஜ.க.வினருக்கு ஹோலி பண்டிகை தொடங்கிவிட்டது. பா.ஜ.க. சிக்ஸர் அடித்து தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தேர்தல் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி". இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். 

 

இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த பகீர் சம்பவம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Incident happened on his pregnant wife in punjab

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ். இவர், பிங்கி (23) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். 6 மாத கர்ப்பமாக இருந்த பிங்கியின் வயிற்றில், இரட்டை குழந்தைகள் வளர்ந்து வந்திருந்தது.

இதற்கிடையில், சில தினங்களாகவே, சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகம் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல், சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சுக்தேவ், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவி பிங்கியை கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்து தீ வைத்துள்ளார். இதில், கர்ப்பிணி பெண்ணான பிங்கியின் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, சுக்தேவ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பிங்கியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கர்ப்பிணி மனைவியை தீ வைத்து தப்பியோடிய சுக்தேவை பிடித்து கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.