Skip to main content

வாஜ்பாய் கவலைக்கிடம்:பாஜக நிகழ்ச்சிகள் ரத்து - டெல்லி விரையும் தலைவர்கள்

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
va

 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் வாய்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.  

 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாக வாஜ்பாய் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் வாஜ்பாய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

 


இதையடுத்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்து வருகின்றனர்.


பாஜக சார்பில் நடக்க இருந்த முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.   உபி, ராஜஸ்தான், மேற்கு வங்கம்,  பீகார்  உள்ளிட்ட  மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் டெல்லி விரைகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்