Skip to main content

புதுச்சேரியிலும் கண்டறியப்பட்டது ஒமிக்ரான் பாதிப்பு

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

omicron

 

உலகை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரான் கரோனாவின் பாதிப்பு, இந்தியாவிலும் வேகமாக அதிகரித்துவருகிறது. ஏற்கனவே நாட்டின் 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 653 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகிருந்த நிலையில் தற்போது 22-வதாக புதுச்சேரியிலும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

புதுச்சேரியில் 80 வயதான முதியவர் ஒருவருக்கும், 20 இளைஞர் ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள இருவரும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்