Skip to main content

17 கோடி பேரில் 9 கோடி பேர் புதிய விதிக்கு மாறியுள்ளனர் - டிராய்

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

 

t

 

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், கேபிள் மற்றும் டிடிஹெச் வாடிக்கையாள்ர்கள் 9 கோடி பேர் சேனல்கள் தேர்வு செய்யும் புதிய விதிமுறைக்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

 

 

டிராய் அண்மையில் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ. 153 செலுத்தி தேர்வு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இது பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருமெனவும் தெரிவித்திருந்தது. தற்போது இதுகுறித்து டிராயின் தலைவர் ஷர்மா, “மொத்தமாக உள்ள 17 கோடி கேபிள் டிவி வாடிக்கையாளர்களில் இதுவரை 9 கோடி பேர் டிராயின் புதிய விதிமுறைக்கு மாறியிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வருடத்திற்கு 13 முறை ரீ-சார்ஜ் இனி தேவையில்லை - அதிரடி உத்தரவை பிறப்பித்த ட்ராய்!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

trai

 

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மாதாந்திர ப்ரீ-பெய்டு திட்டங்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி (திட்டம் செல்லுபடியாகும் காலம்) அளித்து வருகின்றன. இந்தநிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குறைந்தபட்சம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு சாதாரண ரீ-சார்ஜ் திட்டம், ஒரு சிறப்பு கட்டண திட்டம்  (special tariff voucher), ஒரு காம்போ திட்டத்தையாவது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

மாதாந்திர திட்டங்களுக்கு வருடத்திற்கு 13 முறை ரீ-சார்ஜ் செய்யவேண்டிய நிலை இருப்பது, தாங்கள் ஏமாற்றப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக வடிக்கையாளர்களிடம் இருந்து வந்த புகார்களை, இந்த புதிய உத்தரவுக்கான காரணமாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்த உத்தரவு தொடர்பான அறிவிக்கை வெளியான 60 நாட்களில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்திய  தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதால், விரைவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மாதாந்திர ப்ரீ-பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

5ஜி சேவை குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள ட்ராய்...

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

5ஜி தொலைத்தொடர்பு சேவை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாகப் பெருகும் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது.

 

trai

 

இந்தியாவை பொறுத்தவரையில் செல்போன் பயனாளர்கள் தற்போது 4ஜி இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 5ஜி சேவை குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலர் எஸ்.கே. குப்தா, இந்தியாவில் தற்போது 40 கோடி மக்களுக்கு தரமான இணையதள சேவை கிடைக்கிறது என்றும். இந்தியாவில் 2022-ம் ஆண்டு முதல் 5ஜி சேவை தொலைத் தொடர்புத்துறையில் பின்பற்றப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

5ஜி நடைமுறைக்கு வந்தால் 4ஜியைக் காட்டிலும் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5ஜி சேவை மக்களின் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கும் என்றும் டிராய் தெரிவித்துள்ளது.
 

ஒரு நொடியில் 1-ஜிபி டேட்டா பதிவிறக்க வேகம், இடைநிற்றல் இல்லாமல் வீடியோ காணும் வசதி, துல்லியமான காட்சிகள், ஒலிகள் ஆகியவை 5ஜி சேவையின் சிறப்பம்சங்களாக இருக்குமெனவும் கூறப்படுகிறது.


இதற்கான அலைக்கற்றை ஏலத்தை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே 5ஜி சேவை அமெரிக்காவிலும் தென்கொரியாவிலும் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.