Skip to main content

உ.பி உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க போவது யார்? - டைம்ஸ் நவ் -வீட்டோ கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

rahul - modi - kejriwal

 

உத்தரப்பிரதேசம்,கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் அண்மையில் அறிவித்தது.  மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல், மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உத்தரப்பிரதேசம்,கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் வெல்லப்போவது யார் என்பது குறித்து டைம்ஸ் நவ் ஊடகம் கருத்துக்கணிப்பினை வெளியிட்டுள்ளது.

கோவா

கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவுள்ளதாக டைம்ஸ் நவ் -வீட்டோ கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அம்மாநில தேர்தலில் பாஜக 17 -21 இடங்களையும், காங்கிரஸ் 4-6 இடங்களையும் வெல்லும் என தெரிவிக்கும் கருத்து கணிப்பு முடிவுகள், ஆம் ஆத்மி கட்சி 8-11 இடங்களை வெல்லும் என தெரிவிக்கின்றன. கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக பெரும் வெற்றியை ஈட்டும் என டைம்ஸ் நவ் -வீட்டோ கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தில் பாஜக 44 முதல் 50 இடங்களையும், காங்கிரஸ் 12 - 15 இடங்களையும், ஆம் ஆத்மி 5-8 இடங்களையும் வெல்லும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 70 ஆகும்.

 

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை, அங்கு தொங்கு சட்டமன்றம் ஏற்படும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், ஆம் ஆத்மி அதிக இடங்களை வெல்லும் எனவும் டைம்ஸ் நவ் -வீட்டோ கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. கருத்துக்கணிப்பின்படி, ஆம் ஆத்மி 54 -58 இடங்களையும், காங்கிரஸ் 41 முதல் 47 இடங்களையும், பாஜக 1 முதல் 3 இடங்களையும் கைப்பற்றவுள்ளன. மொத்தம் பஞ்சாபில் 117 சட்டமன்ற தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

உத்தரப்பிரதேசம்

டைம்ஸ் நவ்-வீட்டோ கருத்துக்கணிப்பின்படி, உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கவுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக 227 முதல் 254 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சமாஜ்வாடி கட்சி 136 முதல் 151 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 6 முதல் 11 இடங்களை மட்டுமே வெல்லும் எனவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் 8 முதல் 14 இடங்களை வெல்லும் எனவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 403 ஆகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.