Skip to main content

கடும் போட்டிக்கிடையே சபாிமலை புதிய மேல்சாந்தியாக இருவா் தோ்வு!

Published on 18/10/2020 | Edited on 18/10/2020
 Sabaimalai temple to be the new upper house amidst stiff competition!

 

சபாிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகர மண்டல காலம் பூஜைக்காக ஆண்டுத்தோறும் புதிய மேல்சாந்திகள் தோ்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மண்டல மகர காலம் அடுத்த 16-ம் தேதி தொடங்குகிறது. கேரளாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகாித்து கொண்டியிருப்பதால் சில கட்டுபாடுகளுடன் தினமும் குறைந்த அளவு கட்டுபாடுகளுடன் பக்தா்கள் அனுமதிக்கபட உள்ளனா்.

இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. இதில் நேற்று தாிசனத்துக்காக பக்தா்கள் 250 போ் மட்டுமே அனுமதிக்கபட்டனா். இதற்கிடையில் இந்த ஆண்டு ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கு பூஜை செய்வதற்கான புதிய மேல்சாந்திகள் தோ்வு நேற்று சபாிமலை உச்ச பூஜைக்கு பிறகு சந்நிதானத்தில் நடந்தது. இதற்காக ஏற்கனவே நோ்முக தோ்வு மூலம் சந்நிதானத்துக்கு 9 பேரும் மாளிகைபுரத்துக்கு 10 பேரும் தோ்ந்தெடுக்கப்பட்டு இருந்தனா். இதில் தலா ஒருவரை தோ்ந்தெடுப்பதற்கான குலுக்கல் மூலம் நடந்த தோ்வில் பந்தளம் அரண்மனையை சோ்ந்த இரண்டு குழந்தைகள் சீட்டுகளை எடுத்தனா்.

இதில் சபாிமலை ஐயப்பா கோவில் மேல்சாந்தியாக ஜெயராஜ் போற்றி தோ்வு பெற்றாா். இவா் திருச்சூா் பொய்யா பூப்பத்தி வாாிகட்டு மடம் குடும்பத்தை சோ்ந்தவா். ஏற்கனவே இவா் மாளிகைபுரத்து கோவிலில் மேல்சாந்தியாக இருந்துள்ளாா். இதே போல் மாளிகை புரத்துக்கு அங்கமாலியை சோ்ந்த ரெஜிகுமாா் போற்றி தோ்வு செய்யப்பட்டாா்.

இவா்கள் இரண்டு பேரும் காா்த்திகை 1-ம் தேதி முறைப்படி மேல்சாந்திகளாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு இந்த ஆண்டு மகர மண்டல கால பூஜைகளை நடத்துவாா்கள். இதுவரையில் சபாிமலை மற்றும் மாளிகைபுரத்து கோவிலில் மேல்சாந்திகள் போட்டியில் இறுதியில் குறைந்தது 3 போ் மட்டுமே இருந்தனா். ஆனால் இந்த முறை 10 போ் இறுதி போட்டியில் இருந்துள்ளனா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.