உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 29 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் ஆரம்பத்தில் பரவி வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று அனைத்து தரப்பு மக்களையும் கரோனா ஆட்டி வைக்கிறது. அந்த வகையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தற்போது கரோனா தாக்குதல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறது.