Skip to main content

புதுச்சேரி: சம்பள நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

puducherry employees salary issues

 

புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் துறை நிறுவனமான பாசிக் நிறுவனத்தில் 500- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 

 

இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கும் மேலாகச் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்தச் சம்பளத்தை நம்பி வாழ்ந்து வந்த இவர்களின் குடும்பங்கள் சொல்லொனா துயரத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. 

 

கரோனா பேரிடர் காலத்திலும் இவர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளத்திலிருந்து ஒரு மாதச் சம்பளம் கூட வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது புதுவை அரசு. இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, இவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை சம்பளத்தில் 50% உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதம் உள்ள 50% சம்பளத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கவேண்டும், பாசிக் நிறுவனத்தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. 

 

இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும், பாசிக் நிறுவனத்தில் லாபம் ஈட்டக்கூடிய மினரல் வாட்டர் பிரிவு, குப்பையில் உரம் தயாரிக்கும் பிரிவு, போர்வெல் பிரிவு (ரிக்) ஆகிய பிரிவுகளை உடனடியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசிக் நிறுவனத்தில் பல ஏக்கர்களில் பண்ணை அமைக்கப்பட்டது. 

 

இந்தப் பண்ணையில் மாமரம், கொய்யா, தென்னைமரம், பலா, சப்போட்டா ஆகிய மரங்கள் இருந்து வருகின்றன. இதில் விளையக்கூடிய பொருட்கள் காய்த்து அறுவடை செய்யாமல் வீணாகியும், களவாடப்பட்டும் வருகிறது. இந்தப் பண்ணையில் விளையக்கூடிய பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் பல லட்சம் பாசிக் நிறுவனத்திற்கு வருமானம் வரும். எனவே, உடனடியாக ஏலம் விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாசிக் நிறுவனத்தில் பயனற்ற நிலையில் இருந்துவரும் பல்வேறு வகையான பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் பல லட்சங்கள் நிறுவனத்திற்கு வந்து சேரும். எனவே, உடனடியாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், பாசிக் நிறுவனத்தில் பல்வேறு வேலைகள் தாமதமாகவும், காலம் கடத்தியும் நடைபெறுகிறது. 

 

குறிப்பாக இந்நிறுவனத்தில் மேலாண் இயக்குனராக உள்ள சிவப்பிரகாசம் வேளாண் துறையிலும் பொறுப்பு வகித்து வருகிறார். கூடுதலாக பாசிக் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்து வருவதால், இவரால் முழுமையாக பாசிக் நிறுவன வளர்ச்சிக்கு வேலை செய்ய முடியவில்லை. எனவே, பாசிக் நிறுவனத்திற்கு தனியாக மேலாண் இயக்குனரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

http://onelink.to/nknapp

 

அதேபோல் இந்நிறுவனத்தில் மேலாளர் (நிர்வாகம்), மேலாளர் (கணக்கு), மேலாளர் (தணிக்கை பிரிவு) ஆகிய பணியிடங்கள் காலியாக இருந்து வருகின்றன. அவைகளை அரசு ஊழியர்களைக் கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. 

 

ஏ.ஐ.டி.யுசி. பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு சமூக இடைவெளியைப் பின்பற்றி, கோரிக்கை பதாகைகள் கையிலேந்தி, கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.