முதல்வருக்கு எதிராக முகநூலில் கருத்து தெரிவித்த காவலர் ஒருவரை மாநகர காவல் ஆணையர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, தான் முதல்வராக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறியிருந்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் என விவசாய சங்கத்தினரும், பா.ஜ.கவினரும் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும், அருண் டோலின் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். அதில், விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த தார்வார்-உப்பள்ளி மாநகர காவல் ஆணையர் எம்.என்.நாகராஜூ, அருண் டோலினை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அருண் டோலின் இதற்கு முன்பும் இதுபோல் குமாரசாமி அரசை விமர்சித்து முகநூலில் சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வருக்கு எதிராக முகநூலில் கருத்து தெரிவித்த காவலர் பணி இடைநீக்கம்!
சார்ந்த செய்திகள்
Next Story
பாஜக உட்கட்சி பஞ்சாயத்து! தீர்த்து வைத்த டெல்லி!
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் திரிபுரா மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 16 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையானது கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 55 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 32 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. இது கடந்த முறை நடந்த தேர்தலை விட 4 இடங்கள் குறைவாகும். பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திரிபுரா பூர்வகுடிகள் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் மட்டும் வென்றுள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் 11 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் முதல்வராக இருந்த மாணிக் சாகாவுடன் மத்திய அமைச்சராக உள்ள பிரதிமா பௌமிக் பெயரும் பரிசீலனையில் இருந்தது. இதனால் முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்க அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை பாஜகவின் டெல்லி தலைமை திரிபுராவிற்கு அனுப்பி வைத்த நிலையில், இது தொடர்பாக பாஜகவின் டெல்லி தலைமை நடத்திய தீவிர ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் மீண்டும் திரிபுராவின் முதல்வராக மாணிக் சாகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய முதல்வராக மாணிக் சாகா நாளை பதவியேற்க உள்ள நிலையில், மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். திரிபுரா மாநில அமைச்சரவை பதவியேற்பானது நாளை நடைபெற உள்ளது.
Next Story
சேலம் மாநகராட்சிக்கு 25 லட்சம் பரிசு - சிறந்த மாநகராட்சியாக தேர்வு
மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சியாக சேலத்தை தேர்வு சேய்த்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்தல், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வாழ்வியல் சூழலை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்து முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு 55 லட்சம் ருபாய் ஒதுக்கீடு செய்து தற்போது விருதுப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான (2022-2023) சிறந்த மாநகராட்சியாக சேலம் மாவட்டத்தையும் சிறப்பான நகராட்சிகளாக ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம் மற்றும் தென்காசி என மூன்று ஊர்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இதன்படி, சேலம் மாநகராட்சிக்கு 25 லட்சமும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு 15 லட்சமும், குடியாத்தம் நகராட்சிக்கு 10 லட்சமும், தென்காசி நகராட்சிக்கு 5 லட்சமும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.