Published on 17/10/2018 | Edited on 17/10/2018

பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது என்று பெட்ரோலிய அமைச்சர் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினசரி அதிகரித்துகொண்டே இருக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடியும் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இருந்தாலும் விலையை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டெல்லியில் இன்று பேசியுள்ள பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,”பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிப்பதில் மத்திய அரசின் தலையீடு கிடையாது. சர்வதேச விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றி அமைக்கின்றன,” என்றார்.