Skip to main content

மாறுவேட எம்பியின் புதிய தோற்றம் ...

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
narpalli

 

 

 

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி கடந்த பட்ஜெட் கூட்டத்தில் பல்வேறு விதமான போராட்டங்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே நடத்தினார்கள். அதில் நரமல்லி சிவபிரசாத் என்ற எம்பி, மாறுவேடப்போட்டியில் கலந்துகொண்டவர் போல விதவிதமான உடையணிந்து போராடினார். இவர் பெண், துணி வெளுப்பவர், பள்ளிச்சிறுவன், மன்னர் போன்ற மாறுவேடங்கள் போட்டு போராடினார்.

 

 

 

நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்பு போலவே, தெலுங்கு தேச கட்சியினர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வைத்து நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடி வருகின்றனர். இன்று நடைபெற்ற போராட்டத்தில் நரமல்லி சிவபிரசாத்சுதந்திர போராளி உய்யலவாடா நரசிம்ம ரெட்டி போல் உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். நேற்று அன்னமயா என்னும் பிரபல கவிஞரை போன்று உடையணிந்து போராட்டம் நடத்தினார்.  

      

சார்ந்த செய்திகள்