Skip to main content

மூன்று வயது சிறுவனின் உடலுக்குள் இருந்த 15 ஊசிகள்... அதிர்ந்த மருத்துவர்கள்!

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

தெலுங்கானா மாநிலத்தில் மூன்று வயது சிறுவனின் உடலுக்கு 15க்கும் மேற்பட்ட ஊசிகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரொண்டிகுப்பம் பகுதிக்கு அருகில் உள்ள கிராமம் வீபந்தலா. இந்த கிராமத்தில் வசித்துவருபவர் அசோக், அவருடைய மனைவி பெயர் அன்னபூர்னா. அசோக் அப்பகுதியில் உள்ள மரப் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் லோகநாதன் என்ற மகன் இருக்கின்றான். அந்தச் சிறுவன் கடந்த மூன்று நாட்களாக சாப்பிடாமல் இருந்துள்ளான். 
 

gh



இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர், அவனை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார்கள். மருத்துவர் அந்த சிறுவனை ஸ்கேன் செய்து பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளார். சிறுவனின் வயிற்றுக்குள் 15க்கும் மேற்பட்ட ஊசிகள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர், சிறுவனுக்கு அறுவைச்சிகிச்சை செய்து இடுப்புக்கு பின்புறம் இருந்த ஊசிகளை அகற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுவனின் உடலுக்குள் எப்படி ஊசி சென்றது என்று புரியாமல் உள்ளதாக அந்த சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.


 

சார்ந்த செய்திகள்