Skip to main content

மின்னலைப் பார்த்ததால் நின்ற திருமணம்!!!

Published on 30/06/2018 | Edited on 30/06/2018
marriage

 

 



இந்தியாவின் வடமாநிலங்களான பீஹார் மற்றும் உத்திரப்பிரேதசம் மாநிலங்களில் திருமண விஷேங்களின்போது எதாவது அசம்பாவிதம் நடந்து அவ்வப்போது திருமணமே நின்றுவிடும். நாம் இதுபோன்ற செய்திகளை அடிக்கடி கேள்விபட்டிருப்போம்.

 

இந்த ஆண்டு எப்ரல் மாதத்தில் உபியில் ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா பரிமாறுவதில் பிரச்சனை ஏற்பட்டு திருமணம் நின்றது. கடந்த வாரம் பீஹாரில் திருமணத்தில் சாப்பாடு பரிமாறும்போது தட்டு பற்றாக்குறையால் இரு வீட்டாருக்கும் சண்டை எற்பட்டதில் ஒருவர் பலியே ஆகிவிட்டார். இதுபோன்று கடந்த ஆண்டில் இறைச்சி துண்டு வைக்காதது, ஐஸ்க்ரீம் வைக்காதது போன்ற காரணங்களால் நின்ற பல திருமணங்கள் இருக்கின்றன.

 

 

 

தற்போது பீஹார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் மணமேடையில் மணமகன் மின்னலை பார்த்து பயந்து விநோதமாக நடந்து கொண்டதால் மணப்பெண் அவரை வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு இரு வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, அது கலவரமானது. மணமகள் வீட்டாரை அடித்ததற்காக மணமகன் வீட்டார் மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.       

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு முறைகேட்டில் தேஜஸ்வி யாதவுக்கு தொடர்பு?; பீகார் துணை முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Bihar Deputy Chief Minister allegation on Tejashwi Yadav Linked to NEET Exam Malpractice

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு தொடர்பு இருப்பதாக அம்மாநில துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். 

இது தொடர்பாக பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தேஜஸ்வி யாதவின் நெருக்கமான அதிகாரியான அமித் ஆனந்த்,  நீட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான குற்றவாளியான சிக்கந்தர் பிரசாத் யாத்வெண்டுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். அந்த அதிகாரி, பாட்னா மற்றும் பிற இடங்களில் உள்ள விருந்தினர் மாளிகைகளில் சிக்கந்தர் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். 

சிக்கந்தர் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகாரி அனுப்பிய செய்திகளின் விவரங்கள் என்னிடம் உள்ளன. இது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பிரசாத் ஏன் இது குறித்து மௌனம் சாதிக்கிறார்?” என்று கூறினார். இந்தப் பரபரப்பு குற்றச்சாட்டு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 

Next Story

65% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து; பாட்னா நீதிமன்றம் அதிரடி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
 Patna court in action on Repeal of bihar 65% Reservation Act

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார்.  பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்கள் அம்மாநில அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்தார். மேலும் பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 65 சதவீதமாக உயர்த்த முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரை செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் நிதிஷ்குமாரின் பரிந்துரைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 

இதையடுத்து பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உயர்சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காட்டை சேர்த்தால் பீகார் மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு 75 சதவீதமாக அதிகரித்தது. 

பீகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 75% ஆக உயர்த்தும் புதிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து அரசிதழ் வெளியிடப்பட்டது. புதிய சட்டத்தின் படி, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு(ST) 2 சதவிதமும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு(SC) 20 சதவிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு (EBC) 25 சதவிதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை(BC) 18 சதவிதமும், உயர்சாதி ஏழைகளுக்கு (EWS) 10 சதவிதம் என இடஒதுக்கீடு வரையறுக்கப்பட்டது. 

இந்த நிலையில், பீகாரில் இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியினருக்கான 65 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.