Skip to main content

அதிகரிக்கும் கரோனா பரவல்: 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்த வடகிழக்கு மாநிலம்!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

corona

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்துவருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள், தாங்கள் அமல்படுத்திய ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துவருகின்றன. அதேசமயம், வடகிழக்கு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி, எட்டு வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

 

இதற்கிடையே வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவந்தது. இதனையடுத்து, கடந்த ஒன்பதாம் தேதி மணிப்பூர் மாநில அரசு, இரவு நேர ஊரடங்கை மாலை 7 மணியிலிருந்து காலை ஐந்து மணிவரை நீட்டித்தது. இருப்பினும் கரோனா பரவல் குறையவில்லை. இதனையடுத்து மணிப்பூர் மாநில அரசு, அம்மாநிலதில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

 

இந்த முழு ஊரடங்கு வரும் 18ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் வெளியே வர மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலிலும் மணிப்பூருக்கு பாராமுகம்; பயந்ததா பாஜக? 

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Elections also unface Manipur; Why bjp afraid?

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் அந்த மாநிலத்தில் உள்ள மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  மேகாலயாவில் இரண்டு தொகுதியிலும், மணிப்பூரில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே மணிப்பூரில் நிகழ்ந்த கலவரம் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்த நிலையில் மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் போட்டியிடாமல் மாநில கட்சிகளுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பாஜக எடுத்துள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படி இந்த தகவலை பகிர்வதாக வடகிழக்கு மாநிலங்களின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சம்பித் பத்ரா சமூக வலைத்தளமான எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் மோடி வந்து சேரவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில்  பயம் காரணமாக தேர்தலிலும் மணிப்பூருக்கு பாராமுகம் காட்டியுள்ளார் மோடி என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Next Story

“ஒருமுறையாவது மணிப்பூருக்கு வாருங்கள்” - பிரதமருக்கு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்த வீரர்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
tearful plea to PM Modi and says Come to Manipur at least once

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் அரசுக்கு கடந்தாண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இதனையடுத்து, மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. இருந்த போதிலும், அங்கு சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையில், குத்துச் சண்டை வீரர் ஒருவர், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டா உள்விளையாட்டு அரங்கத்தில் MFN 14 (எம்.என்.எஃப்) நடத்தப்படும் தற்காப்பு கலை எனும் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கிடைக்கப்பெறும் சாம்பியன் பட்டத்திற்காக அறிமுக வீரர் முகமது ஃபர்ஹாத் மற்றும் மணிப்பூர் வீரரான சுங்ரெங் கோரன் ஆகியோர் போட்டியிட்டனர். 

இந்த போட்டியில், இறுதியாக சுங்ரெங் கோரன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். பட்டத்தை வென்ற பிறகு மணிப்பூர் வீரரான சுங்ரெங் கோரன், மணிப்பூரை காப்பாற்றுங்கள் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பான வீடியோவில் அவர் பேசியதாவது, “இது எனது தாழ்மையான வேண்டுகோள். மணிப்பூரில் வன்முறை நடக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. மக்கள் உயிரிழந்து வருகின்றனர், பலர் நிவாரண முகாம்களில் உள்ளனர்.

இந்த நிவாரண முகாம்களில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. குழந்தைகளால் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே , தயவு செய்து மணிப்பூருக்கு ஒருமுறை சென்று மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பட்டம் வென்ற மணிப்பூர் வீரர், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.