Skip to main content

அதிகாரி கண்டு கொள்ளாததால் காரின் முன் தொங்கிய போராட்டக்காரர்! (வீடியோ)

Published on 13/04/2018 | Edited on 13/04/2018

அரசு அதிகாரியின் கார் முன்பகுதியில் தொங்கியபடியே வாலிபர் ஒருவர் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

 

Uttarpradesh

 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது ராம்நகர் எனும் குக்கிராமம். இந்த கிராமத்தில் கழிவறை கட்டுவதற்கான நிதியின் இரண்டாவது தவணையை அரசு அதிகாரிகள் நிறுத்தி வைத்ததால், பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். இதுகுறித்து, தொகுதி மேம்பாட்டு அதிகாரியை சந்தித்து முறையிடுவதற்காக ஏராளமான பொதுமக்கள், அவரது அலுவலகத்தின் முன்பாக காத்திருந்தனர். ஆனால், அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தொகுதி மேம்பாட்டு அதிகாரி பங்கஜ் குமார் கவுதம், நீண்டநேரமாக வெயிலில் காத்திருந்த பொதுமக்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துசென்றுள்ளார்.

 

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். இருப்பினும் இதனைப் பொருட்படுத்தாத அதிகாரி, தனது காரை இயக்க, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரீட்ஜ் பால் என்பவர் வேகமாக கிளம்பிய காரின் முன் தாவிக்குதித்து மறித்துள்ளார். ஆனால், கார் நிற்காமல் சென்றது. இதில், கார் முன்னால் தொற்றிக்கொண்டு பீரீட்ஜ் பால் கிட்டத்தட்ட 4 கிமீ தூரத்திற்கு பயணம் செய்தார். அவ்வப்போது அவர் தன் செல்போனிலும் பேசிக்கொள்கிறார். பிறகு சோதனைச்சாவடி வரவும் பாதிவழியில் இறங்கிக்கொண்டார்.

 

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரி மற்றும் வாலிபர் ஆகிய இருவரின் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்கவும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.