Skip to main content

சிறுமியை கோவிலில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்த காவி மிருகங்கள்!  - தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

Published on 13/04/2018 | Edited on 13/04/2018
aasiya bhanu

 

காஷ்மீரை உலுக்கிய சிறுமி கற்பழிப்பு கொலை சம்பவத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் எம்.எஸ்.சையது இப்ராஹீம் விடுத்துள்ள அறிக்கை:


‘’ஜம்மூ காஷ்மீர் மாநிலம் ரசானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முஹம்மத் யூசுஃப், நஸீமா தம்பதியர். இவர்களுக்கு  8 வயதில் ஆசிஃபா பானு என்ற மகள் உள்ளார். 

 

குதிரைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ஆசிஃபாவை காணவில்லை.
 இந்நிலையில் சிறுமி காணாமல் போன 7 நாட்களுக்கு பிறகு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

 இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவி காமுகர்களிடம் ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் வழக்கை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். 

இதனையடுத்து பெற்றோர்களின் போராட்டம் காரணமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதன்பின்னர் இந்த வழக்கு ஜம்மூ காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

 

 இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 8 காவி பயங்கரவாதிகளை  கைது செய்துள்ளனர். 

 

சிறுமியை கடத்திசென்று கோவிலில் அடைத்து வைத்து, மயக்க மருந்தை கொடுத்து, தொடர்ச்சியாக பலநாட்கள் கொடூரமாக கற்பழித்துள்ளார்கள் இந்த மனித மிருகங்கள். இதன் பின்னர் அந்த சிறுமியை முகத்தில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.


பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் காஷ்மீரில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த ஈனச் செயலை கோவிலிலே அரங்கேற்றியதன் மூலம் காவிகள் , இந்துக்களின் கோவில்ளைக்கூட புனிதமாக கருதுவதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

 

  சக மதத்தவர்களை மனிதர்களாக கூட கருதாத காவி பயங்கரவாதிகளையும், குற்றத்தை மறைக்க நினைத்த காவல்துறையையும், பாஜக கூட்டணியில் நீடிக்கும் மஹபூபா முஃப்தி அரசின் கையாலாகாத தனத்தையும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

 

இந்த கொடூரத்தை செய்த காவி மிருகங்களை தூக்கிலிட வேண்டும் என்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது.’’

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.