Skip to main content

காவல்துறையின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்!!! - ராகுல் சாடல்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

g

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றனர். 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்களின் மரணம் அடைய அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக ராகுல் காந்தி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், “காவல் துறையின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்” என்று ராகுல் காந்தி கடுமையாகச் சாடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என அனைவரும் தற்போது இந்த விவகாரத்தில் காவலர்களுக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்