Skip to main content

இந்தியாவில் 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரை 13,405 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 16 ஆயிரத்து 51 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

காலை 8 மணிவரையிலான கடைசி 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 235 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 34 ஆயிரத்து 226 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தினசரி கரோனா உறுதியாகும் சதவீதம் 1.24 ஆக இருந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்