Skip to main content

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று  நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் தென்னாப்பிரிக்காவை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். 

INDIA VS SOUTH AFRICA T20 CRICKET MATCH IN MOHALI INDIA WIN


அதன்படி, முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு  149 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சுமார் 2441 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்தார் விராட் கோலி. இந்திய அணியின் மற்றொரு வீரர் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் 2434 ரன்கள் எடுத்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்