Skip to main content

நாட்டின் ஜிடிபி 7.5% ஆக உள்ளது- மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார நிலைக்குறித்து உறுப்பினர்களின் கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014- 2019 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5% ஆக உள்ளது. 2009- 2014 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 6.4% இருந்ததாக விளக்கமளித்தார். எனவே நாட்டில் பொருளாதார மந்த நிலை இல்லை என்றார். பொருளாதாரம் குறித்து அமைச்சர் பேச தொடங்கிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேறினர். 

india economy said finance minister nirmala sitharaman at parliament in rajya sabha

நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014- ஆம் ஆண்டு முதல் விவாதத்தை நடத்த வேண்டுமென்று கூறும் எதிர்க்கட்சிகள், அதற்கு அரசு பதில் தரும் போது வெளிநடப்பு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று கூறினார். 

 

சார்ந்த செய்திகள்