Published on 04/10/2018 | Edited on 04/10/2018

சந்தா கொச்சார், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்தார். தனது கணவரின் நிறுவனத்திற்காக சலுகை காட்டியதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக சந்தீப் பாக்ஷி என்பவர் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். இவர் ஐந்து வருட காண்ட்ராக்ட்டில் பொறுப்பேற்றுள்ளார்.