Skip to main content

மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியையிடம்  முத்தலாக் கூறிய கணவர்

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

The husband said triple talaq to the teacher in front of the students

 

உத்தர பிரதேசம் மாநிலம், பெரோஷா பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷகீல் (35). இவருக்கும் பாராபங்கி பகுதியைச் சேர்ந்த தமன்னாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரு மாதத்தில் முகமது ஷகீர் குடும்பத்தினர், தமன்னாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், அவரிடம் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு கூறி வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இதனால், தமன்னா பாராபங்கியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

 

இந்த நிலையில், தமன்னாவின் கணவர் முகமது ஷகீர் பணிக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். இதற்கிடையில், தமன்னா பாராபங்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய முகமது ஷகீர் தமன்னாவின் சொந்த ஊரான பாராபங்கிக்கு சென்றார். அதன் பின்னர், முகமது ஷகீர் தமன்னாவுடன் 6 நாள்கள் தங்கிவிட்டு தனது சொந்த ஊரான பெரோஷாவுக்கு சென்றுள்ளார்.

 

அதன் பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி முகமது ஷகீர் மீண்டும் தனது மனைவியை தேடி பாராபங்கியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று அவர் பார்த்த போது தமன்னா வீட்டில் இல்லாதது தெரியவந்துள்ளது. மேலும், தமன்னா பணிக்காக பள்ளிக்கு சென்றுள்ளதாக தமன்னாவின் தாயின் மூலம் தெரிந்துகொண்டார். அதனால், முகமது ஷகீர் தமன்னா பணிபுரியும் பள்ளிக்கு சென்றார். அங்கு தமன்னா வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். நேரடியாக வகுப்பறைக்கு சென்ற முகமது ஷகீர், தமன்னாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவர் தமன்னாவிடம் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்தார்.

 

இதுகுறித்து, தமன்னா கோட்வாலி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், முகமது ஷகீர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.