Skip to main content

கரோனா தொற்றில் இருந்து மீண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Published on 09/08/2020 | Edited on 09/08/2020
ரகத


நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

தனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். கரோனா உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில் தன்னை சந்தித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்  கொள்ளும் படியும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கரோனாவில் இருந்து குணமடைந்தார் என்றும், பரிசோதனையில் நெகடீவ் என வந்ததாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்