Published on 19/04/2021 | Edited on 19/04/2021

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால் மரபணு மாற்றமடைந்த (இங்கிலாந்திலிருந்து பரவிய கரோனா) கரோனா பரவல் வேகமெடுத்ததால் இந்தப் பயணம் இரத்தானது. இந்திய குடியரசு தின விழா, சிறப்பு விருந்தினர் இல்லாமல் கொண்டாடப்பட்டது.
இதன்பிறகு ஏப்ரல் 26ஆம் தேதி போரிஸ் ஜான்சன் இந்தியா வரவிருந்தார். அப்போது அவர் சென்னைக்கும் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சென்னையில் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் பட்டியல் தயாராகி வருவதாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை இரத்தாகியுள்ளது. கரோனா பரவல் அதிகரித்து வருவதால், போரிஸ் ஜான்சனின் வருகை இரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.