Skip to main content

கொரோனா வைரஸ் பயத்தால் நாய்களுக்கும் மாஸ்க் அணிவிப்பு!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020


சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 



சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது சீனாவில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா மாஸ்க் அணிவித்துள்ளார்கள். விலங்குகளுக்கு இந்த வைரஸ் பரவுமா என்று தெரியாத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இந்த நடவடிக்கைகளை சீனர்கள் எடுத்துள்ளதாக தெரிகின்றது.

 

சார்ந்த செய்திகள்