Skip to main content

ஸ்ரீநகர் பெண்ணை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்ற 'சர்ச்சை' ராணுவ அதிகாரி...    

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயத்தில், அங்கு வழக்கம்போல நடக்கும் வன்முறைகளும் நடந்து கொண்டிருந்தன. ஃபரூக் அகமத் தார் என்ற வாலிபனை கற்கள் வீசித் தாக்கியதாகக் குற்றம் சாட்டி, அந்த வாலிபரை தன் கார் பேனட்டின் முன்பு கயிற்றால் அவர் கை கால்களை கட்டி, வீசப்படும் கல்வீச்சுகளுக்கு அவரை ஒரு கவசமாய் பயன்படுத்தினார். இரும்புகளாலும், மரத்தினாலும் செய்யப்பட்ட கவசம் பார்த்தவர்கள், மனிதனையே கவசமாக பயன்படுத்தியது பார்த்து பெரும் சர்ச்சையை இந்தியா முழுவதும் பரவியது. இதற்கு பலதரப்பு கட்சிகள், மனித உரிமை மீறல் கமிஷன் போன்ற பலரும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இத்தகைய கொடூர செயலை செய்தவர் இராணுவ அதிகாரியான மேஜர் லீதுல் கோகாய். 
 

lutil gogai


இவர் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியர்களுக்கும் இவருக்கும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டு போலீஸ் அழைக்கப்பட்டது. விசாரித்ததில் இராணுவ ஆதிகாரி கோகாய் கடந்த 23ஆம் தேதி அன்று ஆன்லைன் மூலம் ஸ்ரீநகரில் உள்ள அந்த ஹோட்டலில் ரூம் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். நேற்று இராணுவ அதிகாரி, ஒரு இளம்பெண் மற்றும் கார் டிரைவருடன் அறைக்கு செல்லும்பொழுது ஹோட்டல் ஊழியர்கள் அந்தப் பெண் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அந்தப் பெண் அதே ஊரைச் சேர்ந்தவர், அதனால் அறைக்கு பெண்ணுடன் செல்ல அனுமதியில்லை என்று அவர்கள் கூற, கோபமான மேஜர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அது சண்டையாக மாற, ஹோட்டல் நிர்வாகம் போலீஸை அழைத்தது. காவலர்கள், அவர்களை விசாரிக்க கான்யார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.  
 

litul gogai 2


விசாரணை முடிந்த பின் லீதுல் கோகாயை விடுவித்துவிட்டனர். வேலை சம்மந்தமாகவே அந்தப் பெண்ணை சந்திக்க வந்ததாகத் தெரிவித்துள்ளார். உடன் இருந்த இருவரிடமும் விசாரணை தொடர்ந்தது. ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணுக்கு பதினெட்டு வயது என்று தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அவர் மைனராக இருக்கக்கூடும் என்று சந்தேகத்தின்பேரில் விசாரணை நடக்கிறது. அந்தப் பெண், தான் கட்டாயத்தின் பேரில் அங்கு வரவில்லையென்றும் அது சாதாரண சந்திப்புதான் என்றும் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே வாலிபரை ஜீப்பில் கட்டி சென்ற சர்ச்சையில் விசாரணை தொடர்கிறது. இந்த சர்ச்சை அதிகாரி தற்போதும் ஒரு சர்ச்சையில் மாட்டியிருக்கிறார்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Tamil Nadu Govt announced Ex-Servicemen Tax Concession

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், ‘கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் வரிச்சலுகையானது தற்போது, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று (13-03-24) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘நடப்பு நிதியாண்டில் இருந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்குகளை பெற இந்த ஐந்து நிபந்தனைக்குள் இடம்பெற வேண்டும். முன்னாள், ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது. மறுவேலைவாய்ப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.  இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

காஷ்மீரில் முழங்கிய பிரதமர்; சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் பயணம் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Prime Minister in Kashmir and First trip after cancellation of special status

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 11ஆம் தேதி வழங்கியது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கினார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றார். விமானம் மூலம் காஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர், ஸ்ரீநகர் பஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜம்மு - காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் கியாரண்டி ஆகும். மக்கள், ஜம்மு - காஷ்மீர் வந்து தங்கள் திருமணங்களை நடத்த வேண்டும். இப்போது, உலகம் முழுவதும் உள்ள பெரிய பிரபலங்களும் ஜம்மு காஷ்மீருக்கு தைரியமாக வருகிறார்கள்” என்று கூறினார்.