Skip to main content

பத்திரிகையாளர் கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை

Published on 02/05/2018 | Edited on 02/05/2018

மும்பை பத்திரிகையாளர் ஜோதிர்மாய்டே கடந்த 2011-ஆம் ஆண்டு அவரது வீட்டில் கொலைசெய்யப்பட்டர். இந்த வழக்கில் தொடர்புடையதாக  தேடப்பட்டுவந்த  நிழலுலக தாதா சோட்டாராஜன் 2016-ஆம் ஆண்டு இந்தோனோஷியாவின் பாலி விமானநிலையத்தில் கைது செய்யட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார்.

chotta

 

மேலும் இந்த கொலை தொடர்பாக சோட்டாராஜன் உட்பட கைது செய்யப்பட்ட  8 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலைவழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில் சோட்டாராஜன் தனது வாக்குமூலத்தில் தாதா தாவூத்துடன் நெருக்கம் காட்டியதால் பத்திரிகையாளர் ஜோதிர்மாய்டேவை கொன்றேன் கூறியிருந்தார்.

தற்போது இந்த பத்திரிகையாளர் கொலைவழக்கில் மும்பை நீதிமன்றம்  சோட்டாராஜன் உட்பட எட்டுபேருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது.       

சார்ந்த செய்திகள்