Skip to main content

அலகாபாத், பைசாபாத் பெயர்களை மாற்ற ஒப்புதல்- உபி அமைச்சரவை கூட்டம்...

Published on 14/11/2018 | Edited on 14/11/2018

 

உத்தரப்பிரதேசத்திலுள்ள பைசாபாத் மற்றும் அலகாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை அம்மாநில அரசு மாற்றப்போவதாக அறிவித்தது.  அதில் அலகாபாத் பெயரை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத் பெயரை அயோத்தியா என்று பெயர் மாற்றப்பட உள்ளதாக தெரிவித்தனர். 
 

இந்நிலையில், உபி மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நகரங்களில் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அனுமதி!

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

Permission to conduct excavations at Gnanawabi Masjid

 

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் ஒன்று உள்ளது. இங்கு இந்து மதக் கடவுளான சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மசூதியில் கண்டறியப்பட்ட லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்கத் தடயவியல் பரிசோதனை செய்ய அனுமதிக்கக்கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இதையடுத்து இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து இருந்தது. அதன்படி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே தொல்லியல் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொழுகை நடத்த எந்தத் தடையும் இதனால் ஏற்படக்கூடாது எனத் தெரிவித்து இருந்தது. மசூதி முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தது. மேலும், தடய அறிவியல் ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு முன் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஞானவாபி மசூதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறைக்கு ஜூலை 26 ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும், வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

 

இந்நிலையில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், ஞானவாபி மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

 

Next Story

கைதி கேக் வெட்ட...சிறை அதிகாரி படம் பிடிக்க... (வீடியோ) 

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
jail

 

 

 

 

உத்திரப்பிரேதசம் மாநிலம் பைஸாபாத் சிறையில் கைதி ஒருவர், தமது பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

 

சிவேந்திர சிங் என்பவர் பல்வேறு வழக்குகளில் சிக்கிக்கொண்டு சிறையில் தண்டனை பெற்று வருகிறார். கடந்த ஜூலை 23 ஆம் தேதி, இவருடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாட நினைத்துள்ளார். பின்னர், சிறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுத்து அவரையே கேக் வாங்கி வரவைத்து , அதை வெட்டி கொண்டாடியுள்ளார்.

 

 

 

 

அப்போது, இதை முழுவதுமாக வீடியோ எடுத்த சிறை அதிகாரி. பிறகு இதை சமூக வலைதளத்திலும் பதிவேற்றியுள்ளார். இதன் காரணமாக, அந்த கைதிக்கு இருந்த சிறப்பு சலுகை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வினய் குமார் என்ற சிறை அதிகாரிதான் இந்த பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடுகள் செய்ததாகவும், இதற்காக ஒரு லட்சம் ரூபாய் அவர் பெற்றுக்கொண்டதாகவும் கைதி ஒப்புக்கொண்டுள்ளார். 

 

இதுகுறித்து, உத்திரப்பிரேதச சிறைத்துறை அமைச்சர் ஜெய் குமார் ஜாக்கி கூறுகையில்," சிறையில் நடந்ததை பற்றி டிஐஜியிடம் விசாரணை நடத்த கூறியிருக்கிறோம். அது உண்மை என்று நிரூபணம் ஆனால், கண்டிப்பாக சிறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.