Skip to main content

மூன்று தலைநகர் மசோதாவை திரும்பப்பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசு!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

jeganmohan reddy

 

2014 ஆம் ஆண்டு ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டது. அப்போது 10 வருடங்களுக்கு ஆந்திராவிற்கும் தெலங்கானாவிற்கும் ஹைதராபாத் பொது தலைநகரமாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு, அமராவதியைத் தலைநகரமாக மாற்ற முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக விவசாயிகளிடமிருந்தும் நிலங்களைக் கையகப்படுத்தியது.

 

இந்தநிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இதனைத்தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க முடிவு செய்தது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும், கர்னூலை நீதித்துறை தலைநகராகவும் மாற்ற ஆந்திரப்பிரதேச பரவலாக்கம் மாற்றும் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய மேம்பாடு மசோதாவையும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது.

 

ஆனால், மூன்று தலைநகர் அமைக்கும் அரசின் முடிவுக்கு ஆந்திர எதிர்க்கட்சிகளும், அமராவதியில் தலைநகரம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மூன்று தலைநகர் அமைக்கும் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது விசாரணையிலும் உள்ளது.

 

இந்த நிலையில் மூன்று தலைநகர் அமைக்கும் சட்டத்தை ஜெகன்மோகன் அரசு திரும்பப்பெற நடவடிக்கை எடுத்துள்ளது. மூன்று தலைநகர் அமைக்க வழி செய்யும் மசோதாவைத் திரும்பப்பெறும் வகையில், புதிய மசோதா ஒன்றை ஜெகன்மோகன் அரசு இன்று நிறைவேற்றியுள்ளது. அப்போது பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, "ஆந்திராவில் மூலதனப் பரவலாக்கம் மிகவும் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை அரசு திரும்பப்பெறுகிறது. பிழைகள் இல்லாத புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவோம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.